
மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மாநகரட்சியில் மாசுபட்ட குடிநீரைப் பருகி 10 பேர் உயிரிழந்த விவகாரத்தில் மாநகராட்சி ஆணையர் உட்பட உயர் அதிகாரிகள் கூண்டாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பாகீரத்புரா பகுதியில் மாநகராட்சி நிர்வாகத்தால் குடிநீர் குழாய்கள் மூலம் வழங்கப்படும் நீரைப் பருகி 1400 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். குடிநீரில் கழிவு நீர் கலந்ததால் பலருக்கும் வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 10 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், மாநகராட்சி நிர்வாகத்தில் இருந்த உயரதிகாரிகள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ள அவர், இந்தூர் மாநகராட்சியின் கூடுதல் ஆணையர் ரோஹித் சிசோனியா, தலைமைப் பொறியாளர் சஞ்சீவ் ஸ்ரீவத்சவா ஆகியோர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மாநகராட்சி ஆணையர் திலீப்குமார் யாதவ் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments