
அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (23) வௌ்ளிக்கிழமை காலை 8 மணி முதல் 48 மணி நேரம் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் அடையாள வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளது.
மருத்துவர்களின் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவை செயல்படுத்துதல், இலங்கை மருத்துவ சேவைக்கு தனித்துவமான சம்பள கொடுப்பனவுகளை வழங்குதல் மற்றும் நிலையான கொடுப்பனவாக கூடுதல் பணி நேரத்தை சம்பளத்துடன் சேர்ப்பது உள்ளிட்ட 5 கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த வேலைநிறுத்தம் செயல்படுத்தப்படுகிறது என்று அதன் செயலாளர் டாக்டர் பிரபாத் சுகததாச தெரிவித்தார்.
இந்த வேலைநிறுத்த நடவடிக்கை நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் செயல்படுத்தப்படும் என்றும், மஹரகம அபேக்ஷா மருத்துவமனை, லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனை, சிறிமாவோ பண்டாரநாயக்க குழந்தைகள் மருத்துவமனை, பேராதனை மருத்துவமனை, டி சொய்சா பெண்கள் மருத்துவமனை, சிறுநீரக மருத்துவமனைகள் மற்றும் புற்றுநோய் மருத்துவமனைகள் உள்ளிட்ட மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனைகளில் இந்த வேலைநிறுத்தம் செயல்படுத்தப்படாது என்றும் அவர் கூறினார்.
tamilmirror

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments