வானமே எல்லை
அதற்கு மேல்
ஏதும் இல்லை... 
இளைஞனே... 
உன் சக்தி தான்...
உச்சம்....
அதற்கு கீழ் தான்
அனைத்தும் 
மிச்சம்...

தங்க முலாம் 
பூசிய தகடில்லை
நீ.....
கரிக்குள்
ஒழிந்துருக்கும்
பட்டை திட்ட
வைரமடா
நீ.....

வீசும்
விசிறிக்குள்
சிக்கும்
காற்றில்லை
நீ....
மலையோடும் மரத்தோடும்
மல்லுகட்டும்
சூறாவளி 
நீ...

கதிரவனை
நம்பி வாழும்
நிலவல்ல நீ
அந்த கதிரவனே
கறுகிப் போகும்
ஒளிப்பிளம்பட
நீ.....

கல்லும்
முள்ளும்
பொருட்டல்லவே
உனக்கு
காடும் 
மலையும்
கடப்பதும்
கணக்கில்லையே
முடக்கு.....

அனல் பறக்கும்
உன்
மூச்சிக் காற்றில்
உருகட்டும்
ஆயுதங்கள்...

அன்பேனும்
அஹிம்சை  ஆயுதமெந்தி
இயன்றவரை
போராடு....

உன்னை
ஏன் 
செய்தாய்
எனக்கேட்டவர்கள்
எப்படி
செய்தாய்
என்று
கேட்கும் வரை
போராடு........

கல்ஹின்னையூர் இப்னு ஸுபைர்