Ticker

6/recent/ticker-posts

செய்தியாளர்கள் சந்திப்பில் பரபரப்பு: விருந்து நிகழ்ச்சியிலிருந்து அவசரமாக வெளியேற்றப்பட்ட டொனால்ட் டிரம்ப்


அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள ஹில்டன் விடுதியில் நடைபெற்ற வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சங்கத்தின் வருடாந்திர இரவு விருந்து நிகழ்ச்சியில், திடீரென பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல் ஏற்பட்டது.

இதன் காரணமாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் ஆகியோர் அங்கிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

அதிபர் டிரம்ப், அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகியோர் இரவு விருந்தில் பங்கேற்றிருந்தபோது, அங்கு நிலவிய பாதுகாப்பு சூழலைக் கருத்தில் கொண்டு, அமெரிக்க ரகசிய சேவை அதிகாரிகள் அவர்களைப் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். இந்த எதிர்பாராத நடவடிக்கையால் அந்த இடத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.

முக்கிய மேடையில் அதிபருடன் அமர்ந்திருந்த உயர் அதிகாரிகள் அனைவரும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். 

இருப்பினும், விழாவில் பங்கேற்ற மற்ற விருந்தினர்கள் அனைவரும் அதே மண்டபத்திற்குள் தங்கியிருக்க அறிவுறுத்தப்பட்டனர்.

தற்போதைய நிலவரப்படி, அதிபர் டொனால்ட் டிரம்ப், துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் ஆகியோர் முழுமையான பாதுகாப்புடன் இருப்பதாகவும், அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேலதிக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

nambikkai

 


Post a Comment

0 Comments