Ticker

6/recent/ticker-posts

“அமெரிக்காவை சார்ந்திருக்கும் நிலையிலிருந்து நாம் விடுபட வேண்டும்” - இஸ்ரேல் பிரதமர் பேச்சு!


“நமக்கான ஆயுதங்களை நாமே தயாரிக்க வேண்டியது அவசியம்” என்று இஸ்ரேல் மக்கள் மத்தியில் பேசியுள்ளார் அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அவர் தெரிவித்தார்.

ராணுவத் தளவாடங்களுக்காக அமெரிக்காவை சார்ந்திருப்பதிலிருந்து விடுபடும் நிலைக்கு இஸ்ரேல் வர வேண்டும் என்று அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார்.

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து போர் தொடுத்த நிலையில், போரை முடிவுக்கு கொண்டுவருவதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், இஸ்ரேலுடன் ஆலோசனை நடத்தாமலேயே ஈரானுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், மேற்கு கரை பகுதியில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்புப் படை வீரர்கள் மத்தியில் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க நண்பர்களிடமிருந்து பல ஆண்டுகளாக நமக்கு கிடைத்து வரும் ஆதரவுக்கு நன்றி என்று குறிப்பிட்டார்.

எனினும், தற்போது சொந்தமாக ஆயுதம் தயாரிக்கும் கட்டமைப்புகள் இருக்க வேண்டியதும், நமக்கான ஆயுதங்களை நாமே தயாரிக்க வேண்டியதும் அவசியம் என்று அவர் தெரிவித்தார்.

ஈரான் மற்றும் அதன் ஆதரவாளர்களுடன் தற்போது சண்டையிட்டு வருவதாக தெரிவித்த அவர், இது இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும், இது நமது பலத்தை வைத்தே அமைந்திருப்பதாகவும் கூறினார்.

அதிக அளவில் தொழில்நுட்பங்களை புகுத்துவதுடன், அதிக அளவிலான புதிய கமாண்டர்களை உருவாக்குவதன் மூலமே, நமது நிலையை வலுப்படுத்த முடியும் என்றும் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.

news18


 


Post a Comment

0 Comments