
குறள் 45:
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.
அன்பும் அறமுமிங்கே இல்வாழ்வின் நற்பயனும் பண்பென்று மாகும் உணர்.
குறள் 46:
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் போஒய்ப் பெறுவ தெவன்.
அறநெறி இவ்வாழ்வின் நற்பயனை வேறு நெறிகளேற்றால் காண்போமா? கூறு.
குறள் 47:
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை
இயல்பாக இல்வாழ்க்கை வாழ்வோன் மற்ற முயற்சி உடையோர்முன் ஏறு.
குறள் 48:
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.
போற்றும் அறவழியில் மற்றவரை வாழவைப்போர் பற்றற்றோர் நோன்பைவிட மேல்.
குறள் 49:
அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.
பழியற்ற இல்வாழ்க்கை வாழ்தல் அறமாம்! அழியாப் புகழ்தரும் வாழ்வு.
குறள் 50:
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும்.
இல்லறத்தில் நல லறத்தைப் போற்றியே வாழ்பவன் தெய்வப் பிறவிதான் இங்கு
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments