Ticker

6/recent/ticker-posts

பிரிட்டன் ரயிலில் கத்திக்குத்து: இருவர் கைது


இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ்ஷாயர் (Cambridgeshire) பகுதியில் நடந்த கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் காவல்துறை இருவரைக் கைது செய்துள்ளது.

ஹண்டிங்டனுக்குச் (Huntingdon) செல்லும் ரயிலில் அந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

அந்தச் சம்பவத்தினால் சிலர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

"பலர் கத்தியால் குத்தப்பட்டனர்" என்று பிரிட்டிஷ் போக்குவரத்து காவல்துறை X தளத்தில் தெரிவித்திருந்தது.

ஆடவர் ஒருவர் பெரிய கத்தியை வைத்திருந்ததாக சம்பவத்தைப் பார்த்த ஒருவர் குறிப்பிட்டார்.

"எங்கே பார்த்தாலும் ரத்தம்" என்றார் அவர்.

சம்பவம் அதிர்ச்சியளிப்பதாகவும் வருத்தமளிப்பதாகவும் பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டாமர் (Keir Starmer) கூறினார்.

காவல்துறையின் ஆலோசனையைக் கேட்டு நடக்கும்படி அவர் பொதுமக்களிடம் தெரிவித்தார்.


nambikkai

 


Post a Comment

0 Comments