
பாதாளக் குழுவால் தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்துள்ள ஞானசார தேரர் தனக்கு தகுந்த பாதுகாப்பை பெற்றுத்தருமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
அமைச்சர் பாதுகாப்புப் பிரிவிலிருந்து இரு அதிகாரிகளை நியமிக்குமாறு பாதுகாப்பு செயலாளருக்கு, ஞானசாார தேரர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
ஞானசார தேரர் இதுகுறித்து கருத்து குறிப்பிடுகையில்,
“நாட்டில் நீண்டகாலமாக உருவாகியுள்ள உலகளாவிய தீவிரவாதத்துடன் தொடர்புடைய இஸ்லாமிய வன்முறைகள் குறித்து நான் பல்வேறு வெளிப்படுத்தல்கள் செய்துள்ளேன்.
பாரம்பரிய முஸ்லிம் சமூகத்தினர் கடும்போக்கு இஸ்லாமிய தரப்புக்களினால் எதிர்நோக்கும் அச்சுறுத்தல்கள் அடக்குமுறைகள் குறித்து தம்மிடம் கூறியுள்ளனர். அதுபற்றிய தகவல்களையும் தந்துள்ளனர்.
சில வாரங்களுக்கு முன்னர் கிழக்கு மாகாணத்தின் எரவூர் பகுதியில் ஜும்மா தொழுகை நேரத்தில் “ஞானசார தேரரும் காசிம் என்ற இளைஞனும் அவர்களின் பின்னணியில் இருப்பவர்களும் ஷரியா சட்டப்படி கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும்” என்ற வாசகத்துடன் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
“லிபியா கதாபி” எனும் குழுவொன்று இதே தகவலை வாட்ஸ்அப் ஊடாக பகிர்ந்துள்ளது.
2013ஆம் ஆண்டிலிருந்து இஸ்லாமிய தீவிரவாதிகளால் ஏற்படவிருந்த பெரும் அழிவை தாமும் தமது அமைப்பும் இணைந்து தடுத்து நிறுத்த முடிந்தது என தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் தமக்கு பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், பலமுறை பாதுகாப்பு கோரியுள்ள போதிலும் இதுவரை வழங்கப்படவில்லை.“ என்று குறிப்பிட்டார்.
ராஜகிரியவில் அமைந்துள்ள தமது விஹாரைக்கு வருகை தந்த புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இந்த அச்சுறுத்தல்கள் குறித்து தகவல் வழங்கியுள்ளதாகவும் ஞானசார தேரர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் ஞானசார தேரர் முஸ்லிம்களுக்கு எதிரான கடும்போக்கை கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
lankatruth

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments