ஐபிஎல் தொடரில் நான் சென்னை அணிக்கு விளையாடினால் போதும்-மொயின் அலி

ஐபிஎல் தொடரில் நான் சென்னை அணிக்கு விளையாடினால் போதும்-மொயின் அலி

ஐபிஎல் தொடரில் நான் சென்னை அணிக்கு விளையாடினால் போதும் என்று இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரரான மொயின் அலி கூறியுள்ளார்.

இந்தியாவில் நடைபெறவுள்ள அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கு, வீரர்கள் தக்க வைத்து கொள்வதற்கான கடைசி நாள் கடந்த 30-ஆம் திகதி என்பதால் ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டது.

அதன் படி சென்னை அணியும், முதல் ஆளாக ரவீந்திர ஜடேஜாவையும், இரண்டாவதாக டோனியையும், மூன்றாவதாக இங்கிலாந்து வீரர் மொயின் அலியையும், நான்காவதாக ருத்ராஜ் கெய்க்வாட்டையும் தக்க வைத்தது.

இந்நிலையில் மொயின் அலி தக்க வைக்கப்பட்டது குறித்து சென்னை அணியின் மூத்த நிர்வாகி காசி விஸ்வநாதன் கூறுகையில், இது குறித்து நாங்கள் மொயின் அலியிடம் பேசிய போது, அவர் தான் சென்னை அணிக்கு விளையாட, முழு மனதோடு இருப்பதாகவும், தன்னை முதல் வீரராகவோ அல்லது கடைசி வீரராகவோ எடுத்தால் பரவாயில்லை.

என்னை நீங்கள் எவ்வளவு தொகைக்கு தக்க வைத்தாலும், எனக்கு கவலையில்லை, சென்னை அணிக்கு விளையாட வேண்டும் என்பதே எனக்கு ஆசை. வேறு எந்த அணிக்கும் விளையாட விருப்பமில்லை, தாரளமாக அணிக்காக விளையாட முன் வருகிறேன் என்று கூறியதாக தெரிவித்தார்.

இதைக் அறிந்த சென்னை ரசிகர்கள், பணத்தை விட அவருக்கு சென்னை அணியில் விளையாடினால் போதும் என்று இருக்கிறார். என்ன இரு மனுஷன் என்று புகழ்ந்து வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post