
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு இஸ்ரேலின் உயரிய குடிமகன் விருதான 'இஸ்ரேல் அமைதி' விருது வழங்கப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
புளோரிடாவில் இரு நாடுகளின் தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், “இஸ்ரேல் அமைதி விருதை அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இஸ்ரேலிய மற்றும் யூத மக்களுக்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பிற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட உள்ளது.
80 ஆண்டுகளில் முதல் முறையாக இந்த விருது இஸ்ரேலியர் அல்லாத ஒரு குடிமகனுக்கு வழங்கப்படுகிறது. மேலும், அமைதிப் பிரிவில் இந்த விருது வழங்கப்படுவது இதுவே முதல்முறை” என்றார்.
tamilmirror

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments