(2022-ல் நடத்த இந்த சம்பவத்தை மீண்டும் பதிவிடுகின்றதில் பெருமைப்படுகின்றோம்)
அந்த பெண் பைக் ஓட்டிவந்து நிறுத்துவதிலிருந்து நடந்து கல்லூரிக்குள் செல்வது வரை ஒரு துளி கூட பிசிறு இல்லாத வேகமான வீரமான நடை.
ஒரு 20 வயது இளம் பெண்ணுக்கு சம வயதுடைய ஆண்களின் முன்னால் ஏற்படும் தயக்கமோ தடுமாற்றங்களோ கொஞ்சமுமில்லை.
கும்பலாக கோஷமிட்டு ஓடி வந்தவர்களை சுட்டுப் பொசுக்குவது போன்ற வெப்பப் பார்வை.
தனக்கு முன்னால் எத்தனை பேர் நிற்கின்றனர் என்பதை பற்றி அலடிக்கொள்ளாமல், அந்த படபடப்பான மனநிலையிலும் கூட, நிற்பதில் வெளியாட்கள் எத்தனைபேர் என்று கவனித்த நிதானம்.
சரியான உடற்தகுதி, கண்ணியமான உடை, வீரமான நடை, கூர்மையான பார்வை,தெளிவான பேச்சு, பதற்றமில்லாத பாவனை என அனைத்துமே இமாலய உச்சம்.
ஒரு போர் வீரனின் அடையாளம்.
உடையிலோ நடையிலோ பேச்சிலோ குரலிலோ தரம் கொஞ்சம் குறைவாக இருந்திருந்தாலும் அல்லாஹூ அக்பர் என்ற முழக்கத்தின் உலகளாவிய வீச்சில் வேகக் குறைவு ஏற்பட்டிருக்கலாம்.
தன்னை நோக்கி உலகத்தை சுண்டி இழுக்கும் ஒரு சம்பவத்தை அல்லாஹ் நடத்துகிறான் என்றால் அதன் தரமும் தேர்வும் திட்டமிடுதலும் மனித அறிவுக்கு எட்டாத வகையில் எவ்வளவு துல்லியமாக நேர்த்தியாக இருக்கும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சான்று.
அல்லாஹூ அக்பர்.
Vettai Email-vettai007@yahoo.com
Tags:
படித்ததில் பிடித்தது