இலங்கை எதற்காக அவசர அவசரமாக ஆயுதங்கள் கொள்வனவு செய்ய வேண்டும்?

இலங்கை எதற்காக அவசர அவசரமாக ஆயுதங்கள் கொள்வனவு செய்ய வேண்டும்?

இலங்கை எதற்காக அவசர அவசரமாக ஆயுதங்கள் கொள்வனவு செய்ய வேண்டும்?


கடந்த வாரம் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பைத் தொடர்ந்து, இலங்கை விமானப்படைக்கு இரண்டு இராணுவ விமானங்களை கொள்வனவு செய்வதற்கான முன்மொழிவு குறித்து ஆலோசிக்க இலங்கை இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்த திட்டம் இரண்டு டோர்னியர் விமானங்களை வாங்குவதை மையமாகக் கொண்டது. டோர்னியர் என்பது இரட்டை எஞ்சின் கொண்ட பல்நோக்கு விமானம் ஆகும், இது இந்திய கடற்படை மற்றும் கடலோர
காவல்படையினரால் கடல்சார் கண்காணிப்புக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த விமானம் அரசாங்கத்தின் "மேக் இன் இந்தியா" திட்டத்தின் காட்சிப் பொருளாகக் கருதப்படுகிறது மற்றும் சுவிஸ் நிறுவனமான RUAG இன் உரிமத்தின் கீழ் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. இந்த விமானத்தை சிறிலங்கா இராணுவத்தினர் எவ்வாறு பயன்படுத்துவார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

பீரிஸ் இந்த சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில்,

“இரண்டு டோர்னியர் விமானங்களை வாங்குவதற்கான திட்டம் உள்ளது. எந்த முடிவும் இல்லை, எதுவும் ஒப்புக்கொள்ளப்படவில்லை. முன்மொழிவுகள் மற்றும் எதிர் முன்மொழிவுகள் உள்ளன, மேலும் இது விவாதிக்கப்படும் விஷயங்களில் ஒன்றாகும்.

இந்தியா எக்ஸிம் வங்கியிடமிருந்து 500 மில்லியன் டாலர் சுழலும் கடன் வரி, உணவு மற்றும் மருந்துகளுக்கான $1 பில்லியன் கடன், ஆசிய கிளியரிங் யூனியனுடன் $515 மில்லியன் செட்டில்மென்ட் ஒத்திவைப்பு மற்றும் $400 மில்லியன் நாணயப் பரிமாற்றம் ஆகியவற்றை இந்தியா கொழும்புக்கு வழங்கிய சில வாரங்களுக்குப் பிறகு பீரிஸின் வருகை வந்துள்ளது. வசதி. இந்த கடன்கள் இருந்தபோதிலும், நாடு தொடர்ந்து எரிபொருள், மருந்து மற்றும் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. இந்த வார தொடக்கத்தில், இலங்கையின் அரச நிறுவனமான சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (CPC), 40,000 டன் எரிபொருளை வழங்குவதற்கு இந்தியாவை நம்பியிருந்ததால், எண்ணெய் வாங்குவதற்கு பணம் இல்லாமல் போனது. எரிபொருள் நெருக்கடி காரணமாக தீவு முழுவதும் வழக்கமான மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.

வடகொரியாவிடமிருந்தும் ஆயுதங்களை கொள்வனவு செய்ததாக இலங்கையின் நிதி அமைச்சரும் அமெரிக்க பிரஜையுமான பசில்ராஐபக்‌ஷ கூறியிருப்பது தற்போது சர்சையாகியுள்ளது .

ஆயுதங்கள கொள்வனவு செய்ய பல மில்லியன் டொலர்களை விரயமாக்கும் இந்த அரசாங்கம் ,உணவுப் பற்றாக்குறையை தீர்க்க டொலர் தட்டுப்பாடு என்று கூறுவதை மக்கள் நம்புவதற்கு தயாராக இல்லை.

இன்று இலங்கை மக்களிடம் எழுந்துள்ள சந்தேகம் "இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் உணவுத் தட்டுப்பாட்டை நீக்கும் முயற்சியில் ஈடுபடாமல் ,ஆயுதங்கள் கொள்வனவு செய்யும் நோக்கம்தான் என்ன?"

இது சிந்திக்க வேண்டிய ஒரு விடயம்.

பக்கத்து நாடுகளுடன் யுத்தம் செய்யும் அளவுக்கு எவருடனும் பகையில்லை .யுத்தம் செய்யும் அளவுக்கு இலங்கை தகுதியுமில்லை.

இப்படியான ஒரு நிலையில் எதற்காக அவசர அவசரமாக ஆயுதங்கள் கொள்வனவு செய்ய வேண்டும்?

இந்த இடத்தில்தான் சிறுபான்மை மக்கள் சிந்திக்க வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. 

இவர்கள் கொள்வனவு செய்கின்ற ஆயுதங்கள் சிறுபான்மை மக்களை நோக்கி  திருப்பிடமாட்டார்கள் என்று எப்படி நம்புவது? 

மியன்மாரைப் போன்ற ஒரு நிலைமை இலங்கையிலும் ஏற்படாது என்று எப்படி நம்புவது?

சிறுபான்மை அரசியல்வாதிகள் ஜாதி மத பேதங்களை மறந்து ஒன்றுபடுங்கள்.ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டுவதில் மட்டும் அரசியல் செய்யாதீர்கள்.மக்கள் பிரச்சினைகளை கையில் எடுங்கள்.3௦ வருட யுத்தத்தால் மக்கள் பட்ட கஷ்டங்கள் போதும் .மீண்டும் அப்படியான ஒரு நிலைமை வரும் முன் நடவடிக்கைகளை தீவிரப் படுத்துங்கள்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார சிக்கலை தவிர்க்கக் கூடிய வழிமுறைகளை கையாளாமல் மீண்டும் மீண்டும் கடன் பெறுவதில் மும்முரமாக இந்த அரசாங்கம் செயல்படுவதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

உணவுப் பொருட்களின் தட்டுப்பாடு ,எரிபொருள் பற்றாக்குறை போன்ற மோசமான பொருளாதார சிக்கலில் இலங்கை இருக்கின்றது 

கொரோனா வைரஸ் வெடித்ததில் இருந்து, சுற்றுலாத் துறையின் வருமானம் மற்றும் ஏற்றுமதிகள் குறைந்துள்ளதால், இலங்கையின் பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது, இதனால் இலங்கை ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் விளைவாக, இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன, இப்படியான ஒரு சூழ்நிலையில் ஆயுதங்கள் கொள்வனவு செய்யும் அளவுக்கு என்ன ஆபத்து இலங்கையை சூழ்ந்துள்ளது?



Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post