வீதி முழுக்க
புரள்கின்ற
இலக்கியங்களில்
எழுத்துலக விசா
அச்சிலேறிய ஆவணங்கள்
கிடைத்த மகிழ்வில்
வரிசையில் நிற்கும்
செம்மொழிகளிலிருந்து
எட்டியெட்டிப்பார்க்கிறது
கவிதைக் குழந்தை
சிதறிக்கிடக்கிற
புத்தகங்களைத் திறந்து
படிக்கிறது காற்று'
இடையிடையே புலனாகும்
துணுக்குகளால் நகைக்கிறது
எழுத்தாணிக்காரத் தெரு
Tags:
கவிதை