
நிழனீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னாவாம் இன்னா செயின்
(அதிகாரம்:உட்பகை குறள் எண்:881)
பொழிப்பு (மு வரதராசன்): இன்பம் தரும் நிழலும் நீரும் நோய் செய்வனவாக இருந்தால் தீயனவே ஆகும்;
அதுபோலவே, சுற்றத்தாரின் தன்மைகளும் துன்பம் தருமானால் தீயனவே ஆகும்.
நிழலே துன்பம்:
கணவன் மனைவி ஒருவர்க் கொருவர்
நிழலாகி பக்குவமாய் வாழ்ந்தால்தான் இன்பம்!
தழலாகி வேற்றுமை கொண்டாலோ துன்பம்!
நீரே துன்பம்:
அளவாய்ப் பெய்தால் மழைநீரோ இன்பம்!
அளவின்றி வெள்ளமாகி நாட்டை வளைத்தால்
அளவற்ற துன்பமாய் மாறும் மழைதான்!
அளவாகப் பெய்தால் நலம்.


0 Comments