
செந்தூரப் பொட்டு நெத்தியில வெச்சு
சிவந்து நிக்கிற பொன் மயிலே
சேதியொன்று மாமனுந்தான் ஒனக்கு
சொல்ல வந்தேன் சிந்துநதிக் கரையினிலே
பட்டு வண்ணச் சரிகையிலே கண்ணு
பட்டுடுமே ரதியே எந்தன் சகியே
முத்துப் பல் ஒளியில நாணி
முழுநிலவோ அழுது வடியுதடி தேம்பி
ஏறிட்டுப் பாக்காத என்ன ஏந்திழையே
ஏந்திடத் துடிக்குதடி ஏக்கத்தில உள்ளமே


0 Comments