
இருப்பினும் ஒருசிலர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். அவர்களை கண்டறிய தமிழக போக்குவரத்துக் காவல் துறையினர் குறிப்பிட்ட கருவியை பயன்படுத்துகின்றனர். அந்த கருவியில் ஓட்டுநர் ஊதும் போது மது அருந்தியுள்ளாரா? இல்லையா? என கண்டறிய முடியும். ஆனால் ஒருசிலர் இந்த பரிசோதனைக்கு ஒப்புக் கொள்வது கிடையாது.
அப்படிப்பட்ட நிலையில் காவல் துறையினர் மிகுந்த சிரமத்தை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. இந்த நிலையை தவிர்க்கும் விதமாக மதுரை போக்குவரத்துக் காவல் துறையினர் தமிழகத்தில் முதல் முறையாக பிரீத் அனலைசர் (Breath Analyser) என்ற அதிநவீன கருவியை இன்று முதல் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
ஓட்டுநர் பரிசோதனைக்கு சம்மதிக்காத பட்சத்தில் இந்த கருவியை அவர் முகம் அருகே கொண்டு சென்றாலே மது அருந்தியுள்ளாரா? இல்லையா? என்று எளிதில் கண்டுபிடிக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் இந்த கருவியில் வீடியோ, புகைப்படம் எடுக்கும் வசதி உள்ளதால் குற்றச்சாட்டுக்கு தேவையான ஆதாரமும் உடனடியாக கிடைத்துவிடும் எனவே இந்த கருவி மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
asianetnews
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments