
இந்த சாய்வாலா என்ற வார்த்தை குஜராத்தைச் சேர்ந்த மற்றொரு இளைஞர் ஒருவருக்கும் பயன்பட்டு தற்போது நாட்டின் முன்னணி தொழிலதிபராக உயர்ந்துள்ளார். ஆம், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 30 வயது இளைஞர் பிரபுல் பிளோரே. இவருக்கு ஐஐஎம் அகமதாபத்தில் எம்பிஏ பட்டம் படிக்க வாய்ப்பு கிடைத்தது.
இருப்பினும் 2017இல் தனது பட்டப்படிப்பை பாதிலேயே விட்டு விட்டு தொழில் செய்யத் தொடங்கினார். 'எம்பிஏ சாய்வாலா'(MBA Chai Wala) என்ற பெயரில் டீக்கடை தொழிலை தொடங்கி தற்போது நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட கடைகளை திறந்து ஒரு சாம்ராஜியத்தையே உருவாக்கியுள்ளார்.
இவரின் நெட் வொர்த் 24 கோடி ரூபாய்க்கும் அதிகம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் தற்போது ரூ.90 லட்சம் மதிப்பிலான Mercedes GLE 300D சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
இதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தனது குடும்பத்தினருடன் சேர்ந்த புதிய காரில் பிரபுல் போஸ் கொடுக்கும் இந்த இன்ஸ்டாகிராம் பதிவு வேகமாக வைரலாகியுள்ளது. இந்த பதிவை 21 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.
news18
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments