Ticker

6/recent/ticker-posts

சந்திரயான் 3 வெற்றி - வாழ்த்து தெரிவித்த ரஸ்ய அதிபர் புடின்


இந்திய விண்வெளி ஆய்வு விண்கலமான சந்திரயான் -3 நிலவின் தென் துருவத்திற்கு அருகில் வெற்றிகரமாக தரையிறங்கியதற்காக இந்திய அதிபர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிபர் புடின் வாழ்த்து தெரிவித்ததாக கிரெம்ளின் செய்தி சேவை தெரிவித்துள்ளது. 
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது ,

அமெரிக்கா, ரஸ்யா மற்றும் சீனா ஆகிய 3 நாடுகள் நிலவில் பத்திரமாக விண்கலங்களை இறக்கி இருக்கின்றன.ஆனாலும், நிலவின் தென் துருவத்தில் இதுவரை எந்த நாடும் விண்கலங்களை இறக்கியதில்லை.

தற்போது சந்திரயான் 3 திட்டத்தின் கீழ் இந்தியா நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக விண்கலத்தை தரையிறக்கி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

விண்வெளி துறையில் இந்தியா படைத்திருக்கும் வரலாற்று சாதனைக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் உலக நாடுகளும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன.

வாழ்த்து தெரிவித்த புடின்

இந்நிலையிலேயே சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதற்கு ரஸ்ய அதிபர் புடின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக  இந்திய அதிபர் திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடிக்கு ரஸ்ய அதிபர் புடின் அனுப்பியுள்ள செய்தியில்,

"இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலம் தென் துருவத்திற்கு அருகில் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். விண்வெளியை ஆராய்வதில் இது ஒரு நீண்ட முன்னேற்றம். அறிவியல் மற்றும் பொறியியலில் இந்தியா அடைந்துள்ள வியத்தகு முன்னேற்றத்திற்கான சான்றாகும் இது " என வாழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source:ibctamil


 



Post a Comment

0 Comments