வட கொரியாவுக்கு (North Korea) எதிராக எல்லையில் ஒலிபெருக்கி பிரசாரம் மீண்டும் தொடங்கப்படும் என்று தென் கொரியா (South Korea) அறிவித்துள்ளது.
தென் கொரிய தேசிய பாதுகாப்பு இயக்குனர் தலைமையில் உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று கூடிய போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
வட கொரியா அணு ஆயுதங்களை அடிக்கடி சோதனை நடத்தி வருவதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நிலவி வருகிறது.
இந்த நிலையில், அதற்கு பதிலடியாக வட கொரியா, குப்பைகள், மனித கழிவுகள் அடங்கிய பைகளை ஆயிரக்கணக்கான பலூன்களில் கட்டி தென் கொரியாவுக்கு அனுப்பியது.
இதேவேளை, இதற்கு எதிரான வட கொரியா நேரடி இராணுவ தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் வீரர்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறு தென் கொரிய இராணுவ கமாண்டர்களுக்கு அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் அறிவித்துள்ளார்.
ibctamil
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
உலகம்