
நீண்ட நாட்களாக சிறைச்சாலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த துமிந்த சில்வா, கடந்த 10ம் திகதி விசேட மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் சாதாரண சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
மீண்டும் திடீரென அன்று இரவே அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில் அதிகாலை இரண்டு மணியளவில் தேசிய மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.
மீண்டும் 12ம் திகதி அவர் சிறைச்சாலை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் துமிந்த சில்வாவை மீளவும் சாதாரண சிறையொன்றுக்கு இடமாற்றம் செய்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com


0 Comments