Ticker

6/recent/ticker-posts

Ad Code



வேலியில் தொங்கவிடப்பட்ட கட்டுமான ஊழியர்கள்


சீனாவின் சீச்சுவான் (Sichuan) மாநிலத்தில் கட்டுமான ஊழியர்கள் தண்டிக்கப்பட்ட விதம் இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலையில் பாதுகாப்புக் கருவிகளை அணிய மறந்ததால் அவர்கள் பாதுகாப்பு வாருடன் தொங்கவிடப்பட்டிருந்ததாக South China Morning Post ஊடகம் சொன்னது.

இணையத்தில் பகிரப்பட்ட காணொளி 7.5 மில்லியனுக்கு அதிகமான முறை பார்க்கப்பட்டது.

ஊழியர்களைத் தொங்கவிடுவது அவமதிக்கும் செயல் என்று சிலர் சாடினர்.

சிலரோ ஊழியர்களுக்குப் பாடம் கற்பிக்க அதுவே சிறந்த வழி என்று கூறினர்.

பாதுகாப்பு வார் அணியாதபோது ஏற்படக்கூடிய அசம்பாவிதத்துடன் ஒப்பிடுகையில் தண்டனை பெரிதல்ல என்று அவர்கள் தெரிவித்தனர்.

ஊழியர்களை அவ்வாறு நடத்துவது சட்டவிரோதமான செயல் என்று வழக்கறிஞர்கள் South China Morning Postஇடம் கூறினர்.

seithi

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments