
"கூட்டணி அரசு அமைப்பதாக அமித் ஷா கூறவில்லை. கூட்டணி ஆட்சித் தான்" என்று அதிமுக - பாஜக கூட்டணி எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடியதும் சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர்கள் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தக் கோரி அமளி செய்தனர். தொடர்ந்து அனுமதி மறுக்க, அதிமுக எம்எல்ஏக்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதன்பின் சட்டசபைக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "இன்று அமைச்சர்களின் மீது விதியின் 72 இன் கீழ் அமைச்சரின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தோம். ஆனால் அதைப்பற்றி பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி அளிக்க மறுத்துவிட்டார். இதை கண்டித்து இன்று பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளோம்.
அமைச்சர்கள் கே.என் நேரு, பொன்முடி மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர கடிதம் கொடுத்தோம். ஆனால் சபாநாயகர் அதை இன்று எடுத்துக்கொண்டு எங்களுக்கு பேச அனுமதிக்கவில்லை. கடந்த காலங்களில் இது போன்று நம்பிக்கை இல்லா தீர்மானம் இரவில் எடுத்துக்கொண்டு வாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் எங்களுக்கு இன்று அனுமதிக்கவில்லை" என்று பேசினார்.
தொடர்ந்து அதிமுக - பாஜக கூட்டணி குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அதில், "நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம். இவர்கள் ஏன் எரிச்சல் அடைகிறார்கள். திமுகவுக்கு பயம் வந்துவிட்டது. எங்கள் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் கூட்டணி வைத்துள்ளோம். யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம் அது எங்கள் விருப்பம்." என்று தெரிவித்தார்.
அப்போது அமித் ஷா கூட்டணி அரசு அமைக்கப்படும் என்று கூறப்பட்டது கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, "கூட்டணி அரசு அமைப்பதாக அமித் ஷா கூறவில்லை. கூட்டணி ஆட்சித் தான். டெல்லிக்கு பிரதமர் மோடி, தமிழகத்துக்கு நான் என்று அமித் ஷா தெளிவாக கூறிவிட்டார்" என்று தெரிவித்தார்.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com


0 Comments