
ஒரு கிளாஸ் சூடான நீரில் தேன் கலந்து குடிப்பது பல மடங்கு நன்மைகளை வழங்கும். இப்போது தேன் தண்ணீர் தயாரிக்கும் முறைகள் மற்றும் நன்மைகள் பற்றி இங்கு பார்க்கலாம்.
தேன் சாப்பிடுவதற்கு தித்திப்பாக இருக்கும். ஒரு முறை சாப்பிட்டால் மீண்டும் மீண்டும் சாப்பிட தோன்றும். தேன் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. இதை சரியான முறையில் எடுத்துக் கொண்டால் ஆரோக்கியத்திற்கு வரப் பிரசாதம் போன்றது. அதிலும் குறிப்பாக சூடான நீரில் தேன் கலந்து குடிப்பது பல மடங்கு நன்மைகளை அதிகரிக்க செய்யும். இந்த தேன் நீரானது எடையை குறைப்பது மட்டுமில்லாமல் செரிமானத்தை மேம்படுத்தும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், தாக்கத்தை தணிக்கும் மற்றும் உடலை உள்ளிருந்து சுத்தம் செய்யும். சரி இப்போது இந்த பதிவில் தேன் தண்ணீர் தயாரிக்கும் முறை மற்றும் அதன் நன்மைகள் என்னென்ன என்று தெரிந்துகொள்ளலாம்.
தேன் தண்ணீர் தயாரிப்பு முறைகள்
1. சூடான நீர் மற்றும் தேன்
இதற்கு முதலில் ஒரு கிலோ சூடான நீரில் 1-2 ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலுக்கு உடனே ஆற்றல் கிடைக்கும்.
2. சூடான நீர், தேன் மற்றும் எலுமிச்சை சாறு
ஒரு கிளாஸ் சூடான நீரில் சிறிதளவு தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும், செரிமானம் மேம்படும். எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இந்த பானம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
3. தேன் மற்றும் இலவங்கைப்பட்டை பொடி
சூடான நீரில் தேன் மற்றும் இலவங்கப்பட்டை பொடி கலந்து குடித்து வந்தால் ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். மேலும் வளர்ச்சி துறை மாற்றம் அதிகரிக்கும். உடலில் கொழுப்புகளும் குறையும்.
4. தேன், எலுமிச்சை சாறு மற்றும் இஞ்சி துண்டு
கொதிக்கும் தண்ணீரில் இஞ்சி துண்டுகளை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து பின் வடிக்கட்டி அதனுடன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து கொடுத்து வந்தால் சளி, இருமல் பிரச்சனை நீங்கும். முக்கியமாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
தேன் கலந்த நீரின் நன்மைகள்
- தினமும் காலையில் வெறும் வயிற்றில் தேன் கலந்த நீரை குடித்து வந்தால் உடலில் இருந்து நச்சுக்கள் வெளியேறிவிடும்.
- தேன் எலும்புகள் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
- இந்த பானம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது மற்றும் பருவ கால தொற்று நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கும்.
- தேன் தண்ணீர் உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பை கரைக்கும். விரைவான இடைகளுக்கு உதவும்.
- தேனில் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் அவை தொண்டை வலியை போக்கும். சளி மற்றும் இருமலில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
- தேன் இயற்கையாகவே உடனடி ஆற்றலை அளிப்பதால் சோர்வாக இருக்கும் போது தேன் கலந்த தண்ணீரை குடித்தால் புத்துணர்ச்சி கிடைக்கும்.
- தேன் வளர்ச்சியை மாற்றத்தை அதிகரித்து செரிமானத்தை மேம்படுத்தும். மேலும் வயிற்று அமில் உற்பத்தி அதிகரித்து உணவை உடைக்க உதவும்.
நினைவில் கொள் ;
- கொதிக்கும் நீரில் ஒருபோதும் தேன் சேர்க்க கூடாது. ஏனெனில் அதன் ஊட்டச்சத்துக்கள் முற்றிலுமாக அழிந்து விடும்.
- தேன் நீரை ஒருபோதும் சூடாக குடிக்கவே கூடாது.
- ஒவ்வாமை பிரச்சனை உள்ளவர்கள் தேன் தண்ணீரை குடிக்க கூடாது.
- தேனில் சர்க்கரை இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் மருத்துவரிடம் கலந்தாலிசித்த பிறகுதான் தேன் தண்ணீர் குடிக்க வேண்டும்.
- ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த பானத்தை ஒருபோதும் கொடுக்கக் கூடாது.
asianetnews

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments