
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான கடுமையான சட்டத்தைக் கொண்டு வர இருக்கிறோம் என்ற மகத்தான அறிவிப்பை மாண்புமிகு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்கள்.
தமிழ்நாடு அரசு ஆணவப் படுகொலைகளைத் தடுக்கும் நோக்கில் உரிய சட்டம் இயற்றத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று உறுதி அளித்துள்ளார் முதல் அமைச்சர்.
“இது குறித்து தேவையான பரிந்துரைகளை அளிப்பதற்காக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி திரு. கே.என்.பாஷா அவர்கள் தலைமையில் சட்ட வல்லுநர்கள், முற்போக்குச் சிந்தனையாளர்கள், மானுடவியல் அறிஞர்களைக் கொண்ட ஒரு ஆணையம் அமைக்கப்படும் என்பதை என்னுடைய முக்கியமான அறிவிப்பாக இம்மாமன்றத்தில் அறிவிக்கிறேன்.
இந்த ஆணையம் அரசியல் இயக்கங்கள், சட்ட வல்லுநர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், பாதிக்கப்பட்ட மக்கள் என அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் பெற்று, இப்பொருள் குறித்து உரிய பரிந்துரைகளை வழங்கும். அதனடிப்படையில், தமிழ்நாடு அரசு ஆணவப் படுகொலைகளைத் தடுக்கும் நோக்கில் உரிய சட்டம் இயற்றத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்”என்று உறுதி அளித்துள்ளார் முதல் அமைச்சர்.
சமூக நீதி வரலாற்றில், சமநீதி வரலாற்றில், சமூக சீர்திருத்த வரலாற்றில், பெண் உரிமை வரலாற்றில் இது மிகமிக முக்கியமான அறிவிப்பு ஆகும்.
கொலை வழக்குகள் உள்ளிட்ட குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றுத் தருவதற்கு இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டம் இருக்கிறது. பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு இழைக்கப்படும் கொடுமைகளில் இருந்து காக்க வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளது.
நமது சட்டங்கள் மிக மிகக் கடுமையானவை. இதனை முறையாகப் பயன்படுத்தி, வழக்கை ஒழுங்காக நடத்தி தண்டனை பெற்றுத்தர முடியும். இது போன்ற ஆணவப் படுகொலை வழக்குகள் அனைத்திலும் கடுமையான பிரிவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தொடர்புடைய குற்றவாளிகள் உடனடியாகக் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இருப்பினும் இதற்கென தனிச்சட்டம் தேவை என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
kalaignarseithigal

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments