Ticker

6/recent/ticker-posts

1330 குறள்களுக்கு குறள்வடிவில் விளக்கம்-13


குறள் 56:

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள்
பெண்.

அக்கறை கொண்டே குடும்பத்தை, சார்ந்தோரை எக்கணமும் காப்பவள் பெண்.

குறள் 57:

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.

சிறைவைக்கும் பெண்ணடிமை காக்குமா? பெண்ணின் முறையான பண்புகளே காப்பு.

குறள் 58:

பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு.

இல்லறப் புத்துலகம் பொன்னாகும் பெண்ணுக்கோ இல்லறத்தான் தன்மை பொறுத்து.

குறள் 59:

புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை

தாறுமாறாய் வாழ்வில் இணையர் அமைந்துவிட்டால் ஏறுபோல் நன்னடை ஏது?

குறள் 60:

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு.

பண்புகளே இல்லறத்தின் வேராகும்! பிள்ளைகள் நல்லவராய் வாழ்ந்தால் புகழ்.

(தொடரும்)

 


Post a Comment

0 Comments