
2026 ஆம் ஆண்டில் பாடசாலை நடைபெறுகின்ற நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்ட அனர்த்தநிலைமை மற்றும் சில மாகாணங்களில் பாடசாலைகள் தொகுதிக்கும் போக்குவரத்து முறைமைக்கும் நிகழ்ந்துள்ள சேதங்களை கருத்திற்கொண்டு 2026 ஆம் ஆண்டில் 5 தொடக்கம் 13 வரையான தரங்களுக்கான பாடசாலை நேரம் முற்பகல் 7.30 மணி தொடக்கம் பிற்பகல் 1.30 மணி வரையாக மாறாதிருக்கும்.
அத்துடன் தரம் 6 இல் இருந்து 13 வரை நாளொன்றுக்கான பாடவேளைகளின் எண்ணிக்கை 7 ஆக அமைவதோடு ஒரு பாடவேளைக்கு முன்னர் நிலவியதுபோல் 45 நிமிடங்கள் ஒதுக்கப்படும். கல்விச் சீர்திருத்த செயற்பாங்கு தரம் 1 மற்றும் தரம் 6 என்பவற்றுக்காக இவ்வருடத்தில் அமுலாக்கப்படுவதோடு அந்த செயற்பாங்கின்கீழ் தரம் 6 இன் கல்வி அலுவல்களை ஒழுங்குறுத்துதல் எதிர்வரும் ஜனவரி 21 ஆந் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட அரசாங்க பாடசாலைகளும் பிரிவெனாக்களும் 2026 ஆம் ஆண்டின் முதலாவது தவணைக்காக ஜனவரி 05 ஆந் திகதி ஆரம்பமாக உள்ளதாக கல்வியமைச்சு அறிவித்தது.
தரம் 1 இற்கான பிள்ளைகளை அடையாளம் காண்கின்ற செயற்பாங்கு ஜனவரி 5 ஆந் திகதி ஆரம்பிப்பதோடு மேற்படி கல்விச் செயற்பாடுகள் ஒழுங்கமைந்தவகையில் ஜனவரி 29 ஆந் திகதியே ஆரம்பிக்கப்படுமென கல்வியமைச்சின் அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் தரம் 1 சம்பந்தமான செயற்பாட்டுப் புத்தகங்களும் தரம் 6 சம்பந்தமான கற்றல் மொடியுல்களும் அந்த தரங்களின் கல்விச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட முன்னர் மாணவர்களுக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஏனைய தரங்களுக்கு அவசியமான பாடநூல்கள் ஏற்கெனவே விநியோகிக்கப்பட்டுவிட்டதாகவும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
அதேவேளையில் 2025 க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பகுதி ஜனவரி 12 தொடக்கம் 20 வரை நடாத்தப்பட உள்ளதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
lankatruth

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments