
குறள் 145:
எளிதென இல்லிறப்பா னெய்துமெஞ் ஞான்றும் விளியாது நிற்கும் பழி.
எளிதாய்ப் பிறர்மனையைத் தீண்டலாம் என்னும் கழிசடையைத் தீண்டும் பழி.
குறள் 146:
பகைபாவம் அச்சம் பழியென நான்கும் இகவாவாம் இல்லிறப்பான் கண்.
பகைதீமை அச்சம் பழியென்றும் நீங்கா பிறன்மனை நாடுவோனை விட்டு.
குறள் 147:
அறனியலான் இல்வாழ்வா னென்பான் பிறனியலான் பெண்மை நயவா தவன்.
பிறன்மனை நாடாத பண்பாளன் மட்டும் அறங்காக்கும் இல்லறத்தா னாம்.
குறள் 148:
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க் கறனென்றோ ஆன்ற வொழுக்கு
பிறன்மனையை நாடாத சான்றாண்மை ஒன்றே அறமும் ஒழுக்கமு மாம்.
குறள் 149:
நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின் பிறற்குரியாள் தோள்தோயா தார்.
கடல்சூழ் உலகத்தின் நன்மைகள் எல்லாம் பிறர்மனைத் தோள்சேரா தார்க்கு
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com






0 Comments