Ticker

6/recent/ticker-posts

வாழ்வை காக்கும் தந்தையே!


அன்பின் நிழலாய் 
வாழ்வை காக்கும் தந்தையே,
அமைதியின் ஆழமாய் 
எங்களை தாங்கும் உறவையே…
உன் உழைப்பின் வியர்வை தான்
எங்கள் உலகத்தின் வெளிச்சம்,
உன் மௌனத்தின் அர்த்தம் தான் 
எங்கள் வாழ்வின் நிச்சயம்.
சொல்லாமல் செய்த தியாகங்கள்
ஆயிரம் உன்னுள்,

சிரிப்பில் மறைத்த சுமைகள்
எத்தனை உன் நெஞ்சுள்…
எங்கள் கனவுகளுக்காக 
நீ கண்ட இரவுகள்,
இன்று எங்கள் வெற்றியில் 
ஒளிர்கின்றன சூரியன்கள்.
கையை பிடிக்காமல் 
வழி காட்டும் ஆசானே,
விழும் முன் தாங்கும் 
மௌன வீரனே…
உன் பெயர் சொல்வதிலேயே
பெருமை பிறக்குது,

உன் அன்பு நினைவில் 
வாழ்வும் இனிக்குது.
இன்று உனக்காக ஒரு நாள் 
அல்ல தந்தையே,
எங்கள் உயிரில் நீ என்றும்
 நிலைத்த நிழலே…
உன் பாதையில் நாங்கள் 
நடக்கும் வரம் போதும்,
உன் ஆசீர்வாதமே எங்கள் 
வாழ்க்கையின் போதும்.

ஆர்.எஸ்.கலா 

 


Post a Comment

0 Comments