Ticker

6/recent/ticker-posts

விமல், கம்மன்பில, திலித், நவரத்ன, சுகீஸ்வர, பத்திரண ஆகியோர் நீதிமன்ற அவமதிப்பு புரிந்துள்ளனர் – கோட்டை நீதவான் அறிவிப்பு!


உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள முன்னாள் உளவுத்துறைத் தலைவர் சுரேஷ் சாலே தொடர்பாக வெளியிட்ட அறிக்கைகள் மூலம் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, சுகீஸ்வர பண்டார, அசங்க நவரத்ன, திலித் ஜயவீர, மஹிந்த பத்திரண உள்ளிட்ட சிலர் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக கோட்டை நீதவான் வசந்த அமரசேன இன்று (05) தீர்மானித்துள்ளார்.

சந்தேகநபர்கள் 2024 ஆம் ஆண்டின் 08 ஆம் இலக்க நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தை மீறும் வகையில் கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தது.

இதன்படி, சுரேஷ் சாலேவை தடுத்து வைத்து விசாரணை செய்வது தொடர்பாக கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் இடம்பெற்ற சத்தியாக்கிரக போராட்டத்தின் போது வெளியிட்ட கருத்துக்கள் மூலம் முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர்களில் ஒருவரான சுகீஸ்வர பண்டார, ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் தலைவர் அசங்க நவரத்ன, சிரேஷ்ட பேராசிரியர் மஹிந்த பத்திரண மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர ஆகியோர் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக கோட்டை நீதவான் வசந்த அமரசேன தீர்மானித்துள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விரிவான அறிக்கையொன்றைச் சமர்ப்பித்து விடுத்த கோரிக்கையைக் பரிசீலித்த நீதவான் இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இதற்கமைய, இது தொடர்பில் மேலதிக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறியப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நீதவான் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

lankatruth


 


Post a Comment

0 Comments