Ticker

6/recent/ticker-posts

Ad Code



திருக்குறள் குழந்தைப் பாடல்கள்-23

புல்லறிவாண்மை--85
அறிவாற்றல் இருந்தால் உலகம் மதிக்கும்
இல்லை என்றால் உலகம் நகைக்கும்
!

அறிவில் லாமை இல்லாமை!
மற்றவை எல்லாம் இல்லாமை
என்றே உலகம் கருதாது!
அறிவிலி ஒருவன் மனமுவந்து
பொருளைத் தந்தால் பெறுபவனின்
நல்வினைப் பயனே என்றுரைப்பார்!
 
அறிவிலி இங்கே ஏற்படுத்திக்
கொள்ளும் தீமையைப் பகைப்புலமும்
செய்ய முடியாத் தீமையாம்!
தன்னைத் தானே அறிவுடையோன்
என்றே புகழ்தல் அறிவின்மை!
நூலைப் படிக்கா விட்டாலும்
படித்தது போல நடிப்பவர்கள்
படித்ததைக் கூட நம்பமாட்டார்!
மனதில் காக்கும் ரகசியத்தை
வெளியே சொல்லும் அறிவிலியோ
தனக்குத் தானே துன்பத்தை
தேடிக் கொண்டு தத்தளிப்பான்!
கேட்க மாட்டார் சொன்னாலும்!
தனக்கும் செய்யத் தெரியாது!
இந்தத் தன்மை உள்ளவரோ
இறுதி வரைக்கும் நோய்போலாம்!
 
அறிந்தவன் போல அறிவிலியோ
எண்ணி நடிப்பான்! அவனைத்தான்
அறிவுடை யோனாய் மாற்றிடவே
முயல்வோன் அறிவிலி யாகிடுவான்!
அனைவரும் உண்டு என்பதையோ
இல்லை யென்று சொல்பவனை
உலகம் பேயாய்க் கருதிடுமே!
 
இகல் -- 86
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை!

கூடி வாழ மறுக்கின்ற
அற்பக் குணந்தான் இகலாகும்!
சேர்ந்து வாழும் எண்ணமின்றி
வெறுப்பை உமிழ்ந்து நின்றாலும்
அவரை வெறுத்தல் பண்பல்ல!
அரவ ணைத்தல் பெருந்தன்மை!
 
வேற்றுமை என்னும் மனநோயை
மனதை விட்டே நீக்கிவிட்டல்
அழியாப் புகழுடன் வாழ்ந்திடலாம்!
துனபந் தன்னில் பெருந்துன்பம்
உட்பகை கொண்டு பிரிவதுதான்!
பகையை நீக்கும் பண்பிருந்தால்
அதுவே சிறந்த பேரின்பம்!
 
வேற்றுமை ஆடும் நேரத்தில்
ஒற்றுமை நாடும் உள்ளத்தை
வென்றவர் உலகில் யாருமில்லை!
பிரிவை விரும்பும் அறிவிலிகள்
வெற்றியின் நீதிப் பொருளறியார்!
 
வேறு பாட்டை ஒதுக்கிவிட்டால்
அதுபோல் செல்வம் ஏதுமில்லை!
அதையே மாந்தர் வரவேற்றால்
அதுபோல் கேடும் வேறில்லை!
நன்மை கொழிக்கும் நேரத்தில்
வேறு பாடு கொள்வதில்லை!
துன்பம் உலுக்கும் நேரத்தில்
காரணம் இன்றிப் பகைகொள்வார்!
 
வேறு பாட்டால் துன்பந்தான்!
இணக்கம் கொண்டால் இன்பந்தான்!
திருக்குறள் குழந்தைப் பாடல்
 
பகைமாட்சி--87
பக்குவமும் அணுகுமுறையும் பகைவரைக்
கையாளும் ஆயுதங்கள்

வலிமை மிகுந்தோர் பாய்ந்துவந்தால்
பகையைத் தவிர்த்துப் பணிந்துவிடு!
வலிமை யற்றோர் சீறிவந்தால்
எதிர்த்து நிற்கத் துணிந்துவிடு!
 
சேர்ந்தோர் மீதோ அன்பில்லை,
வலிமை மிக்கத் துணையில்லை,
தனக்கும் ஆற்றல் வலிமையில்லை!
இவரோ பகையை வெல்லமாட்டார்!
 
அச்சம் உறுதி இல்லாதோர்
மற்றவ ரோடு இணங்காதோர்
ஈகைப் பண்பே இல்லாதோர்
இவரைப் பகைவர் வென்றிடுவார்!
 
ஒழுக்கம் இன்றி வாழ்பவனை
பகைவ்ர் எளிதில் தோற்கடிப்பார்!
எதெற்கெடுத் தாலும் சினம்கொள்வோர்
சிற்றின் பத்தில் வெறிகொண்டோர்
பகையை வெல்தல் எளிதாகும்!
பகையை எதிரிகள் விரும்பிடுவார்!
சேர்ந்தே இருந்து கவிழ்ப்பவனை
எதைக்கொடுத் தேனும் பகையாக்கு!
குற்றம் புரியும் குணக்கேடர்
பகைமைப் பகைவருக் கெளிதாகும்!
 
அறிவிலி, அச்சம் கொண்டவர்கள்
பகையோ வெற்றியை எளிதாக்கும்!
கற்காத மாந்தரை வென்றிடலாம்!
செயலை முடிக்க முடியாதோர்
உலகில் புகழ்பெற முடியாது!
 
பகைத்திறம் தெரிதல்88
பகைவரின் இயல்புகள் அறிவது அறிவுடைமை!

பகையோ தீங்கை விளைவிக்கும்!
அதையே சிரித்து விளையாட்டாய்
பொழுது போக்காய் விரும்பாதே!
வில்லை உடைய வீரரிடம்
பகையைக் கொண்ட போதிலுமே
சொல்லை ஏராய்க் கொண்டிருக்கும்
அறிஞ ரோடு பகைக்காதே!
தனியாய் இருந்தும் பலபேரைப்
பகைத்துக் கொள்வோன் அறிவிலிதான்!
பகையை நட்பாய் மாற்றுகின்ற
பக்குவப் பண்பே பெருமையாம்!
துணையே இன்றி வாழ்பவர்க்கு
இருவர் பகைவ ராகிவிட்டால்
ஒருவரைத் துணையாய் மாற்றவேண்டும்!
ஆய்ந்து தெளிந்து பழகாத
ஒருவரை நம்பக் கூடாது!
துன்பம் ஆட்டும் நேரத்தில்
நடுநிலை கவனம் கொள்ளவேண்டும்!
நமது துன்பம் அறியாத
நண்ப ரிடத்தில் சொல்லாதே!
நமது குறையைப் பகைவரிடம்
எடுத்துச் சொல்லக் கூடாது!
வழியை அறிந்து பொருள்சேர்த்துப்
பாது காப்பாய் வாழ்பவனைக்
கண்டால் பகைவன் பயப்படுவான்!
முள்மரந் தன்னை இளம்நிலையில்
கிள்ளி எறிதல் நன்றாகும்!
முற்றி விட்டால் வெட்டுவோரை
காயப் படுத்தித் துடிக்கவைக்கும்!
பகைவர் செருக்கை அறிந்திருந்தும்
ஏளன மாக விட்டுவிட்டால்
மூச்சு விடுகின்ற பொழுதுக்குள்
பகைவர் அழிப்பார் உணர்ந்துகொள்!
திருக்குறள் குழந்தைப் பாடல்
 
உட்பகை -- 89
உறவுகளைத் துண்டாடும் உட்பகையத் தூக்கி எறி
!

நிழலும் நீரும் நோய்தந்தால்
இனிமை யல்ல இன்னல்தான்!
இனிக்கப் பேசும் உறவுகளும்
உட்பகை கொண்டால் துன்பந்தான்!
வாளைப் போன்ற நேர்ப்பகைக்கோ
அஞ்ச வேண்டாம்! வேர்போல
ஊன்றிப் பழகி உட்பகையை
அவிழ்க்கும் பகைவருக் கஞ்சவேண்டும்!
உட்பகை அறிந்து காத்துக்கொள்!
இல்லையேல் இங்கே மட்கலத்தை
அறுக்கும் கூர்மைக் கருவியைப்போல்
அதுவே அழித்து ஒழித்துவிடும்!
மனமே மாறா உட்பகைவர்
உறவைப் பிரிக்கும் குற்றத்தை
உவகை யுடனே செய்திடுவார்!
உறவுக் குள்ளே உட்பகையா ?
இறக்கும் வரைக்கும் துன்பந்தான்!
உடனி ருக்கும் மாந்தரிடம்
உட்பகை இருந்தால் பேரழிவின்
பிடியில் இருந்தே காப்பதுவோ
கானல் நீர்தான் என்றுணர்வாய்!
செப்பும் மூடியும் ஒன்றாக
இருப்பது போலத் தோன்றுகின்ற
தோற்றம் கொண்ட உட்பகைவர்
ஒட்டா மல்தான் பிரிந்திருப்பார்!
அரத்தால் தேய்க்க இரும்பழியும்!
உட்பகை வளர குலமழியும்!
எள்முனை அளவே உட்பகையோ
சிறிய தாக இருந்தாலும்
பெரிய தீங்கை விளைவிக்கும்!
மனத்தால் ஒன்றாமல் வாழ்வதுவும்
குடிசையில் பாம்புடன் ஒன்றாக
சேர்ந்தே இருப்பதும் ஒன்றாகும்!
 
பெரியாரைப்பிழையாமை--90
பெரியாரைத்துணைகொள் ; பெருவாழ்வுகிட்டும்!

செயலைமுடிக்கும்ஆற்றலுள்ள
ஏந்தலைஇகழ்ந்துபேசாமல்
இருப்பதேதனக்குப்பாதுகாப்பாம்!
ஆற்றல்மிகுந்தபெரியாரை
மதிக்காவிட்டால்அதனால்தான்
வாழ்வில்துன்பம்வந்தடையும்!
பெரியோர்சொல்லைக்கேட்காமல்
செயலைச்செய்தால்  தோல்விதான்!
அவரைத்தாக்கிப்பேசுவதோ
தானேவாழ்வில்அழிவதற்கே!
பெரியோருக்குத்தீங்கிழைத்தல்
எமனைவலிந்தேஅழைப்பதாகும்!
கொடியோர்சினத்தில்சிக்கியவர்
வாழ்வில்நிம்மதிஇழந்திடுவார்!
நெருப்பில்விழுந்தவன்பிழைத்திடலாம்!
சான்றோர்நோகச்சீண்டியவன்
பிழைப்பதிங்கேஅரிதாகும்!
சன்றோர்சினத்துக்காளானால்
செல்வம்எல்லாம்அழிந்துவிடும்!
மலைபோல்உயர்ந்தேவாழ்கின்ற
அற்புதஆற்றல்படைத்தவரை
அற்பமாகமதிப்பவர்கள்
தன்குடிஅழியத்தாழ்ந்திடுவார்!
கொள்கைமிளிரும்பெரியோரோ
சினந்தால்அரசும்அழிந்துவிடும்!
பெரியோர்சினத்தில்சிக்கிவிட்டால்
எத்தனைவலிமைஇருந்தாலும்
தப்பிப்பிழைக்கமுடியாது.
(தொடரும்)

Post a Comment

0 Comments