என் இதய பூவே..!

என் இதய பூவே..!


ஒரு பூவின் வாசம்...
மண்ணில் வீச...
என் வாழ்க்கை...
உரமாய் போகும்...

பல தடைகள் 
பல சோதனைகள் 
உனக்காய் என்றும் 
நான்இருப்பேன் 
உயிர்மூச்சாய்...
வந்த போதும்...
நேர்ந்தபோதும்...

வாழ்க்கையில் எனக்கென 
எதுவும் இல்லை...
வாழ்வதற்கு 
துளிவிருப்பமும் இல்லை...
இருந்த போதும்...
என் பூவே 
உனக்காய் வாழ்கிறேன்...

வார்த்தைகள் நாளாபுறம் 
போர் தொடுத்த போதும்...
வார்த்தைகளல் என்னுள்ளம் 
காயப்பட்ட போதும்...
வாழத் தெரியாதவள் என 
பெயர் சூட்டினாலும்...
பூவே உனக்காய் 
என் ஜீவன் வாழும்...

உன்னிதழ் புன்னகை 
ஒன்றே போதும்...
என் இதயம் வாழ...
உன் கண்கள் கலங்கி 
நீ நின்றால்...
என் ஜீவன் போய்விடும்...

எத்துயரும் உன்னை 
தீண்டாவண்ணம்...
உயிர் பூவாய் 
உனை காப்பேன்...
என் ஜீவன் உயிர் 
பிரியமுன்...
உன் ஜீவன் 
கரை சேர்ப்பேன்...

யாரும் இல்லையென 
என்னிவிடாதே...
உன் உயிர் மூச்சாய் 
என்றும் நானிருப்பேன்...
பூவே உன் இதழின் 
புன்னகை தீபம் ஔிற ...
என் ஜீவன் மெழுகாய் 
உருகும்...

என் ஜீவன் வாழ்வதே 
சோதனைகள் கண்டு 
என்றும் உனக்காய்..உயிரே...
துவண்டு விடாதே...
சோதனைகளை நீ 
சாதனையாக்கி விடு...

அப்போது...
வேதனைகள் 
நீங்கி...நம்பிக்கை 
ஓங்கும்...அப்போது...
நீயும் வாழ்வாய்...
செடியில் பூத்த 
புது மலர் போலவே...
என் இதய பூவே...




Post a Comment

Previous Post Next Post