"பள்ளியை விட ஹிஜாப் தான் முக்கியம்" மகளை வீட்டிற்கு அழைத்து சென்ற தந்தை -VIDEO

"பள்ளியை விட ஹிஜாப் தான் முக்கியம்" மகளை வீட்டிற்கு அழைத்து சென்ற தந்தை -VIDEO

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள கௌசியா பள்ளியில், ஹிஜாப் அணியக்கூடாது என பள்ளி நிர்வாகம் மறுப்பு தெரிவித்து உள்ளதால், முஸ்லிம் பெண்களின் கல்வி பாதிக்கப்படும் என்ற நிலை உருவாகி உள்ளது. மாண்டியா மாவட்டத்தில் உள்ள கௌசியா பள்ளியில் ஹிஜாப் அணிந்து வந்த பெண்ணை உள்ளே அனுமதிக்காததால், அவரது தந்தை, "எங்களுக்கு பள்ளியை விட ஹிஜாப் முக்கியம்" என்று ஆசிரியர்களிடம் கூறிவிட்டு, தனது மகளை அழைத்துக்கொண்டு பள்ளியை விட்டு வெளியேறினார்.

இதுக்குறித்து வீடியோவை ட்விட்டரில் பகிரப்பட்டு உள்ளது. அந்த வீடியோவில், அங்கு இருக்கும் ஆசிரியர்களிடம், தனது குழந்தையை வகுப்புகளில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு தந்தையை கோருவதைக் காணலாம். அதேநேரத்தில் "எந்தப் பிரச்சினையும் இல்லை" என்று ஆசிரியர் குறிப்பிடுவதைக் காணலாம்,. 

பள்ளியை விட ஹிஜாப் தான் எங்களுக்கு முக்கியம்:
மாண்டியாவில் உள்ள கௌசியா பள்ளியில் இருந்து தனது மகளை வீட்டிற்கு அழைத்துச் செல்லும் போது "பள்ளியை விட ஹிஜாப் தான் எங்களுக்கு முக்கியம்" சாதிக் பாஷா கூறுகிறார். பள்ளி ஊழியர்கள் அவரை சமாதானப்படுத்த பலமுறை முயற்சித்தும் தோல்வியடைந்ததால், என் குழந்தையை அனுப்புவதில் எனக்கு சிக்கல் உள்ளது. எனது குழந்தையை ஹிஜாப் இல்லாமல் வகுப்புகளுக்குச் செல்ல அனுமதிக்க மாட்டேன் என்று கூறிவிட்டு வெளியேறினார்.
zeenews.india

Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post