கோவை உக்கடம் பகுதியில் உள்ள ஹோலி ஃபேமிலி கான்வென்ட் மெட்ரிக் மேனிலைப் பள்ளிக்கூடத்தில் 14-04-2022 நாளன்று காலை 10-00 மணிக்கு மழலையர் பட்டமளிப்பு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இறை வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.விழாவிற்கு பள்ளிக்கூட முதல்வர் ஜெய்ஸ்ரீ மரியம் சிஸ்டர் தலைமை தாங்கினார்.
56 மழலை மாணவச் செல்வங்கள் பட்டம் பெறத் தயாராக இருந்தனர்.
பெற்றோர் ஆசிரியர் கழகச் சேர்மன், குறள் யோகி, தமிழ்ச் செம்மல் முனைவர் மு.க.அன்வர் பாட்சா அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவச் செல்வங்களுக்குப் பட்டங்கள் வழங்கி, விழாச் சிறப்புரையாற்றினார்.
அப்போது,கல்வியின் மேன்மை, ஒழுக்கத்தின் உயர்வு, நற்பண்புகளைக் கற்றுக் கொடுப்பதில் ஆசிரியர்களோடு, பெற்றோருக்கும் பெரும்பங்கு உண்டு. மனித நேயம் கொண்ட பண்புமிக்க சமுதாயம் மலர வித்திடுவோம் என்று எடுத்துரைத்தார்.
ஆசிரியர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து மாணவக் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
K.G TEACHERS மிகச்சிறப்பாக விழா ஏற்பாடுகளைச் செய்து இருந்தனர்.
நிறைவாக நன்றி நவிலலுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.
வேட்டை நிருபர்
தமிழ்நாடு
Vettai Email-vettai007@yahoo.com
Tags:
தமிழ்நாடு