Ticker

6/recent/ticker-posts

எல்லையற்ற துன்பம் இது!

விபத்து நடந்தநாள்  01.02.2003

விண்வெளி ஓடமாம் வெற்றிக் கொலம்பியா
மண்ணகம் நோக்கியே வந்தது-- விண்ணில்
திடீரெனத் தீப்பிழம்பு! தேசமே தேம்பியழ
படீரென விண்டது பார்.

விண்வெளி வீர்ரகள் வென்றேதான் வந்திடுவார்
என்றேதான் மக்கள் எழுச்சியுடன்--நின்றிருந்தார் 
கண்ணெதிரே ஏழுபேரும் கங்குகளாய் மாறினரே!
மண்ணகமே விம்மியது மாய்ந்து.

சாதிக்கச் சென்றவளே! சாவ்லாவே பொன்மகளே!
சாதனையின் முத்திரையைத் தந்துவிட்டு-- வேதனையின்
வெங்கொடுமை நித்திரையில் விண்மகளாய்ச் சாய்ந்ததேனோ?
இந்தியத்தாய் விம்முகின்றாள் இன்று.

மக்களின் கண்ணீர்முன் மாக்கடலின் தண்ணீரோ
எட்டுதுளி யாகிவிடும் என்நெஞ்சே! --வெற்றிமகள்
கல்பனா சாவ்லாவோ காலமகள் ஆகிவிட்டாள்!
எல்லையற்ற துன்பம் இது.


கொலம்பியா விண்வெளி ஓடம் விபத்து (Space Shuttle Columbia disaster) பிப்ரவரி 1, 2003 இல் நடந்தது. கொலம்பியா விண்வெளி ஓடம் அமெரிக்காவின் நாசாவால் பயன்படுத்தபட்ட முதல் விண்வெளி ஓடமாகும். STS 107 என்ற விண்வெளி பயணத்தை முடித்து கொண்டு பூமிக்குத் திரும்பி கொண்டிருந்த கொலம்பியா விண்கலம் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்த பொழுது வெடித்து சிதறியது. இந்த விபத்தில் விண்கலத்தில் பயணம் செய்த ஏழு வீரர்களும் மரணமடைந்தனர்.

அந்த விபத்திற்காக  மதுரை பாபாராஜ் அவர்கள் எழுதிய கவிதையை மாண்புமிகு டாக்டர் ஏபி. ஜே.அப்துல்கலாம் அவர்கள் பாராட்டி எழுதிய மடல் 







Post a Comment

0 Comments