மீண்டும் டொனால்ட் டிரம்ப்?

மீண்டும் டொனால்ட் டிரம்ப்?

நவம்பர் 15 ஆம் திகதி முக்கிய அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலுக்கான போட்டியில் டொனால்ட் டிரம்ப் களமிறங்குவது தொடர்பான அறிவிப்பை அவர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஓஹியோவில் கூடியிருந்த மக்களிடையே நவம்பர் 15ஆம் திகதி ஃப்ளோரிடாவில் உள்ள பால்ம் கடற்கரையில், மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடப்போவதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தொழிலதிபரான டிரம்ப், குடியரசு கட்சி வேட்பாளராக கடந்த 2016-ஆம் ஆண்டு தோ்தலில் போட்டியிட்டு அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்றாா்.

இதனையடுத்து, 2020-ஆம் ஆண்டு ஜனாதிபதி தோ்தலிலும் குடியரசு கட்சி சாா்பில் வேட்பாளராகப் போட்டியிட்ட டிரம்ப், ஜனநாயகக் கட்சி வேட்பாளா் ஜோ பைடனிடம் தோல்வியைத் தழுவினாா் என்பது குறிப்பிடத்தக்கது.  



 



Post a Comment

Previous Post Next Post