"இளையர்கள் அதிக அளவில் போதைப்பொருள் குற்றங்களைப் புரிகிறார்களா?"

"இளையர்கள் அதிக அளவில் போதைப்பொருள் குற்றங்களைப் புரிகிறார்களா?"



கடந்த 10 ஆண்டுகளில் இளையர்கள் அதிக அளவில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களைப் புரிகிறார்களா என நாடாளுமன்ற உறுப்பினர் டான் வூ மெங் (Tan Wu Meng) கேட்டிருந்தார்.

அதற்குச் சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம்
எழுத்துபூர்வப் பதிலளித்தார்.

16 வயதுக்குக் கீழ் அல்லது 14 வயதுக்குக் கீழ் உள்ள இளையர்கள் போதைப்பொருள் குற்றங்களில் அதிகமாக ஈடுபடுவதாகத் தெரியவில்லை என்று அவர் கூறினார்.

2012க்கும் 2021க்கும் இடையே ஆண்டுதோறும் போதைப்பொருள் குற்றங்களுக்குக் கைதானவர்களில் 10 விழுக்காட்டினர்  14 வயதுக்குக் கீழ் இருந்தனர் என்று அமைச்சர் சொன்னார்.

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு தொடர்ந்து இந்த நிலவரத்தைக் கண்காணிக்கும் என்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.

:TODAY - Brand Spotlight



 


Post a Comment

Previous Post Next Post