கடந்த (18-03-2023 )சனிக்கிழமை அன்று கோயம்புத்தூர்., குனியமுத்தூர் பகுதியில் இருக்கும் என்.எஸ்.மெட்ரிக் மேனிலைப் பள்ளியில் மிகச் சிறப்பாக மழலையர் மேல் பாலருக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
தமிழ்த் தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது.
விழாவுக்குத் தமிழக அரசின் திருவள்ளுவர் விருதாளர், தமிழ்ச் செம்மல், முனைவர் மு.க. அன்வர்பாட்சா அவர்கள் தலைமை தாங்கினார்.
இவ்விழாவில் நிர்வாக அறங்காவலர் திரு T.N. கமாலுதீன் ஐயா அவர்கள், தாளாளர் திரு T.N.அப்துல் காதர் அவர்கள், செயலாளர் திரு இம்ரான் கான் அவர்கள், N.S.தொடக்கப் பள்ளி முதல்வர் திருமதி N.வேலுமணி அன்பரசன் முதலானோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளியின் முதல்வர் திருமதி வாசுகி ரவிச்சந்திரன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.
விழாவில் மழலையர் பட்டதாரி மாணவச் செல்வங்களுக்கு விழாத் தலைவர் பட்டங்கள் வழங்கி, கல்வியின் மேன்மையுடன்,அது தரும் சிறப்புகள் குறித்தும் அனைவரும் மனங்கொள்ளும் வண்ணம் சிறப்புரை ஆற்றினார்.
பெற்றோர்கள் திரளாகக் கலந்து கொண்டு விழாவைக் கண்டு மகிழ்ந்தனர்.
பட்டம் பெற்ற மாணவர்கள், மற்றும் ஆசிரியர்கள் குழுப்படம் எடுத்துக் கொண்டனர்.
பள்ளியின் முதல்வர் உள்ளிட்ட ஆசிரியர் பெருமக்கள் விழா ஏற்பாடுகளைச் சிறப்பாக செய்து இருந்தனர்.
நிறைவாக பள்ளியின் துணை முதல்வர் திருமதி மல்லிகா அவர்கள் நன்றி நவில, விழா நாட்டுப் பண்ணுடன் இனிதே நிறைவு பெற்றது.
வேட்டை நிருபர்
தமிழ்நாடு
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
தமிழ்நாடு
மிகவும் அருமையான பதிவு... எங்களுடைய நெஞ்சார்ந்த நன்றிகளைக் கூறிக் கொள்கிறோம்... வேட்டையின் சேவை சிறக்கட்டும்; தொடரட்டும்... வாழ்த்துக்கள் 🙏💖
ReplyDelete