இவர்கள் மூவரும் ஒரு பகுதியில் பணிபுரிந்த நிலையில், ஒரே இடத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். இந்நிலையில், திருநங்கை மகேஸ்வரிக்கு அஞ்சலி மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. தன்னை திருமணம் செய்து கொள் என அஞ்சலியை மகேஸ்வரி தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், தனக்கு விருப்பமில்லை எனக் கூறி அஞ்சலி தொடர்ந்து மறுப்பு தெரிவித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை அன்று இது தொடர்பாக அஞ்சலி மற்றும் மகேஸ்வரிக்கு இடையே வாக்குவாதம் ஏற்படவே, மகேஸ்வரி அஞ்சலியை கத்தியால் குத்தியுள்ளார். கத்திக்குத்து காயங்களுடன் அஞ்சலி நள்ளிரவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர்களுடன் அருகே வசிக்கும் விக்னேஷ் என்ற நபர் அஞ்சலியின் குடும்பத்தினருக்கு போன் செய்து மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை கூறியுள்ளனர். பதறிப்போன அஞ்சலியின் குடும்பத்தார் ஊரில் இருந்து கிளம்பி மருத்துவமனைக்கு வந்துள்ளனர். அப்போது அஞ்சலி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் மகேஸ்வரிக்கும் கத்தி குத்து காயங்கள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. தனது மகளுக்கு நேர்ந்த அவலத்தால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில், திருநங்கை மகேஸ்வரி மீது வழக்கு பதிவு செய்த காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும், இந்த கொலை சம்பவத்தில் உடன் அருகே வசிக்கும் அஸ்மீர் ஸ்ரீநிவாஸ் என்ற நபர் மீதும் சந்தேகம் இருப்பதாக அஞ்சலியின் குடும்பத்தினர் புகாரில் தெரிவித்துள்ளனர்.
news18
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
இந்தியா