திருக்-குர்ஆன் தமிழாக்கம் -104

திருக்-குர்ஆன் தமிழாக்கம் -104


அத்தியாயம் - 104
ஸூரத்துல் ஹூமஜா 
(புறங்கூறல்)

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)

 


104:1. குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்.

104:2. (அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான்.

104:3. நிச்சயமாகத், தன் பொருள் தன்னை (உலகில் நித்தியனாக) என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று அவன் எண்ணுகிறான்.

104:4. அப்படியல்ல, நிச்சயமாக அவன் ஹுதமாவில் எறியப்படுவான்.

104:5. ஹுதமா என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?

104:6. அது எரிந்து கொண்டிருக்கும் அல்லாஹ்வின் நெருப்பாகும்.

104:7. அது (உடலில் பட்டதும்) இருதயங்களில் பாயும்.

104:8. நிச்சயமாக அது அவர்களைச் சூழ்ந்து மூட்டப்படும்.

104:9. நீண்ட கம்பங்களில் (அவர்கள் கட்டப்பட்டவர்களாக).

(தொடரும்)

SOURCE:eraivanainokki


 



Post a Comment

Previous Post Next Post