
ஆஸ்திரேலியாவில் ஞாபக மறதி மற்றும் மன அழுத்த பிரச்சினையால் அவதிப்பட்ட பெண் ஒருவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அவருக்கு பல்வேறு பரிசோதனைகளை செய்த போதும் என்ன பிரச்சினை என மருத்துவர்களால் கண்டறிய முடியவில்லை. இதையடுத்து தலைப்பகுதியில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்து பார்த்த போது, மூளைக்குள் 8 செ.மீட்டர் நீளத்தில் உயிருடன் ஒரு ஒட்டுண்ணி புழு இருந்தது கண்டறியபட்டுள்ளது.
இதைப் பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். ஏனெனில், இதற்கு முன்பாக மனித மூளைக்குள் ஒட்டுண்ணி புழு இருந்ததாக மருத்துவ வரலாறு இல்லை. இந்நிலையில் மருத்துவ உலகில் மிகவும் அரிதான பிரச்சினையாக இது பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த 64-வயது பெண்ணுக்குதான் இந்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு தொடர்ந்து வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வறட்டு இருமல், காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்துள்ளது. 3 மாதங்களாக தொடர்ந்து இந்த பிரச்சினை நீடித்து வந்ததால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றார். அதன்பிறகு மீண்டும் 2022 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஞாபக மறதி, மன அழுத்தம் ஆகிய பாதிப்புகளும் அந்தப் பெண்ணுக்கு ஏற்பட்டுள்ளது
இதனால், கான்பெராவில் உள்ள மருத்துவமனையில் அந்த பெண் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்து பார்த்த போது மூளையில் வினோதமாக எதோ இருப்பது தெரியவந்தது. முழுவதும் தீவிரமாக சோதனை செய்து பார்த்த போது மூளைக்குள் இருந்தது 8 சென்டிமீட்டர் நீளமுள்ள ஒட்டுண்ணி புழு என்பது தெரியவந்தது. இதனால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இது பற்றி மருத்துவர்கள் கூறுகையில், மூளையில் ஏற்படும் தொற்று பாதிப்புகளுக்கு அவ்வப்போது நரம்பியல் நிபுணர்கள் சிகிச்சை அளிப்பது வழக்கம்.
ஆனால் இதுபோன்று மூளையில் ஒட்டுண்ணி புழு இருந்தது இதுவரை யாரும் அறிந்திடாதது. பெண்ணின் மூளையில் இருந்தது ஓபிடாஸ்காரிஸ் ராபர்ட்ஸி என்ற இனத்தை சேர்ந்த லார்வா புழுவாகும். மருத்துவ வரலாற்றிலேயே இது ஒரு நம்ப முடியாத விசயமாக பார்க்கப்படுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.
ஆஸ்திரேலிய பெண்ணுக்கு ஏற்பட்ட இந்த பாதிப்பு பற்றிய தகவல் Emerging Infectious Diseases என்ற இதழில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுவாக இதுபோன்ற ஒட்டுண்ணிகள் இரைப்பையில் தான் காணப்படும். மலைப்பாம்பின் கழிவு மூலமாக இந்த ஒட்டுண்ணி புல்வெளிக்கு வந்து இருக்கலாம் என்றும், அதன் பின்னர் ஒட்டுண்ணி பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலுக்குள் வாய் வழியாகவோ, அல்லது எதோ ஒரு வகையிலோ சென்று இருக்க வாய்ப்பு உள்ளது என்றும் கூறுகிறார்கள் மருத்துவர்கள்.
Source:news18
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்

.gif)



0 Comments