
ஆனால், இப்போது தன் மகனையும் தவிக்கவிட்டு அவர் பாகிஸ்தான் நடிகையான சனா ஜாவேத்தை திருமணம் செய்து கொண்டு இருக்கிறார். மகனை தற்போது சானியா மிர்சா பார்த்துக் கொள்வார் என கூறப்படுகிறது. தனி ஆளாக மகனை வளர்க்க அவர் ஆயத்தமாகி விட்டார். சோயப் மாலிக் தான் இந்த திருமண உறவில் இருந்து விலகிச் சென்றதாக தெரிகிறது.
சோயப் மாலிக் தற்போது திருமணம் செய்துள்ள நடிகை சனா ஜாவேத்துக்கு இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. சோயப் மாலிக்கின் முதல் மனைவி பெயர் ஆயிஷா சித்திக்கி. அவருடன் 2002இல் திருமணம் செய்த சோயப் மாலிக், பின்னர் அவரை விவாகரத்து செய்தார்.
அதன் பின் இரண்டாவதாக சானியா மிர்சாவை திருமணம் செய்தார். அப்போது இந்தியா - பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள் என பரபரப்பாக பேசப்பட்டது. சானியா பாகிஸ்தானுக்கு சென்று விடுவார் என்றெல்லாம் கூட பேசப்பட்டது. ஆனால், சானியா தான் இந்திய குடிமகள் என உரக்கக் கூறி இந்தியாவிலேயே தங்கினார்.
எனினும், சானியா மிர்சா டென்னிஸ் விளையாட்டில் தீவிரமாக இருந்தார். மறுபுறம் சோயப் மாலிக் உலகம் முழுவதும் நடந்த பல்வேறு டி20 கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று வந்தார். கடந்த ஆண்டு டென்னிஸில் இருந்து சானியா மிர்சா ஓய்வு பெற்ற பின் அவருக்கு நிறைய நேரம் இருந்தது. ஆனாலும், சோயப் மாலிக் விலகியே இருந்த நிலையில் தற்போது அவர்கள் திருமணம் விவாகரத்தில் முடிந்துள்ளது. இந்த விவகாரம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரண்டு நாட்டிலும் பேசுபொருளாக மாறி இருக்கிறது.
mykhel
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)



0 Comments