Ticker

6/recent/ticker-posts

Ad Code



6-ரமழான் மாத நோன்பு தொடர்பான ஃபத்வாக்கள்


கேள்வி:
உணவை ருசி பார்த்தால் நோன்பு முறிந்துவிடுமா?

பதில்:
உணவை ருசி பார்ப்பவர் அதை விழுங்கிவிடாத பட்சத்தில் அவரது நோன்பை அது முறிக்காது. எனினும், அவசியம் தேவை ஏற்பட்டாலேயன்றி அதை நீங்கள் செய்ய வேண்டாம். இது போன்ற சந்தர்ப்பத்தில் உண்ணும் எண்ணம் இல்லாமல் தப்பித் தவறி விழுங்கப்பட்டால் அது நோன்பை முறித்துவிடாது.
(முஹம்மத் ஸாலிஹ் அல் முனஜ்ஜித்)

கேள்வி:
மாதத்தீட்டுடைய பெண் வெட்கம் காரணமாக நோன்பு நோற்றால் அவளுக்குப் பாவம் பதியப்படுகின்றனவா?

பதில்:
அப்பெண்ணின் செயல் தவறானது என்பதில் சந்தேகமே இல்லை. இது போன்ற விடயங்களில் வெட்கப்படுவது ஆகுமானதல்ல. மாதத்தீட்டு என்பது பெண்களுக்கு அல்லாஹ் விதித்த இயற்கையான ஒரு அம்சம். தீட்டுடைய ஒரு பெண் தொழுவதையும், நோன்பு நோற்பதையும் இஸ்லாம் தடுத்துள்ளது. வெட்கத்தின் காரணமாக மாதத்தீட்டுடன் நோன்பு நோற்ற அப்பெண் தான் மாதத்தீட்டுடன் பிடித்த அந்த நோன்புகளைக் கழாச் செய்ய வேண்டும். இதன் பின்னர் இவ்வாறு செயற்படக் கூடாது. அல்லாஹு அஃலம்!
(முஹம்மத் ஸாலிஹ் அல் முனஜ்ஜித்)

கேள்வி:

தனது உடல் எடையைக் குறைப்பதற்காக அல்லது நோயிலிருந்து நிவாரணம் பெறுவதற்காக ரமழானில் நோன்பு பிடிப்பவர் பற்றிய சட்டம் என்ன?

பதில்:

தனது நோக்கத்தை இந்த வட்டத்திற்குள் அவர் சுருக்கிக் கொண்டால் அவருக்கு மறுமையில் எந்தக் கூலியும் இல்லை.

‘(விரைவாக அழியும்) இவ்வுலகை யார் விரும்புகின்றார்களோ, நாம் நாடுவோருக்கு நாடுவதை அதில் அவசரமாக வழங்குவோம். பின்னர் அவனுக்கு நரகத்தை ஏற்படுத் துவோம். இழிவுபடுத்தப் பட்டவனாகவும், அருளை விட்டும் விரட்டப்பட்ட வனாகவும் அதில் அவன் நுழைவான்.’

‘யார் மறுமையை விரும்பி, நம்பிக்கை கொண்ட நிலையில் அதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றனரோ அவர்களின் முயற்சி நன்றி பாராட்டப்படத்தக்கதாகும்.’(17:18-19)

‘யார் ஈமானுடனும் அல்லாஹ்விடம் கூலியை எதிர்பாத்தும் நோன்பு நோற்கின்றாரோ அவரது முன் சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும்’ என்ற ஹதீஸுக்கு ஏற்ப ஒரு முஃமினுடைய எண்ணம் அமைய வேண்டும்.

மக்களுக்கு மார்க்கத்தைச் சொல்லுவோர் ‘இஹ்திஸாப்’ அல்லாஹ் வுக்காக அவனிடம் கூலியை எதிர்பார்த்து நோன்பு நோற்க வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். இஸ்லாத்தின்பால் உள்ளம் ஈர்க்கப்படுவதற்காக நோன்பு நோற்பதில் உள்ள நன்மைகளைச் சொல்ல வேண்டும்.
(முஹம்மத் ஸாலிஹ் அல் முனஜ்ஜித்) 

(தொடரும்)

தமிழாக்கம் (அபூ அப்னான்)


 



Post a Comment

0 Comments