தற்போது நாம் நவீன காலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதால் நம்முடைய வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கம் ஆகியவற்றால் நாம் பல்வேறு உடல் பிரச்சினைகளுக்கு ஆளாகிறோம். இன்னும் சொல்ல போனால் பலர் 30 வயதில் இருந்து 40 வயதுக்குள் பல்வேறு நோய்களின் தாக்குதலுக்கு உள்ளாகி சிரமப்படுகிறார்கள்.
மோசமான வாழ்க்கை முறையே நோய்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் என்பதால், அவற்றை சிறிய அளவில் இருக்கும்போதே முறையாக கவனித்தால், ஆபத்திலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். மேலும் நீங்கள் மருத்துவமனைக்கு செல்லாமலே வீட்டில் இருந்தபடியே அவற்றை சரி செய்யலாம் தெரியுமா...? அது எப்படி என்று அறிய தொடர்ந்து படியுங்கள்..
இதற்கு நீங்கள் உங்கள் வீட்டில் இருக்கும் ஒரு துண்டு வெல்லத்தை வைத்து ஒரு ஸ்பஷல் பானம் செய்து தூங்க செல்வதற்கு முன் குடியுங்கள். இந்த பானம் உங்கள் உடலில் உள்ள பல்வேறு வியாதிகளை துரத்தியடிக்கும்.
தேவையான பொருட்கள்:
வெல்லம் - 1 துண்டு
ஏலக்காய் - 1
தண்ணீர் - 1 டம்ளர்
செய்முறை:
ஒரு கிளாஸ் சூடான நீரில் வெல்லம் மற்றும் ஏலக்காய் சேர்த்து சிறிது நேரம் அப்படி மூட் வைக்க வேண்டும். பிறகு வடிகட்டி குடியுங்கள். நீங்கள் விரும்பினால் இதனுடன் 1 ஸ்பூன் சுக்குப்பொடி சேர்க்கலாம். இந்த பானம் உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமின்றி, எண்ணற்ற நோய்களையும் குணப்படுத்தும்.
Tags:
ஆரோக்கியம்