படமெடுத்த ராஜநாகத்திற்கு மாறி மாறி முத்தம் கொடுத்த இளம்பெண்! இணையத்தை ஆக்கிரமித்த காட்சி

படமெடுத்த ராஜநாகத்திற்கு மாறி மாறி முத்தம் கொடுத்த இளம்பெண்! இணையத்தை ஆக்கிரமித்த காட்சி


பெண் ஒருவர் படமெடுத்து நிற்கும் ராஜநாகத்திற்கு மாறி மாறி முத்தம் கொடுத்த காட்சி இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

பொதுவாக பாம்புகள் விஷத்தன்மை அதிகம் கொண்டுள்ளதால், மனிதர்கள் அருகில் செல்வதற்கே பயம் கொள்வார்கள். ஆனால் பாம்புகளும் மனிதர்களைப் போன்று அறிவாக செயல்படும் என்றாலும் சில தருணங்களில் கோபத்தையும் வெளிக்காட்டுகின்றது.

ஆனால் சில தருணங்களில் சமையலறை, வாகனங்கள், படுக்கையறை இவற்றிலும் பதுங்கி மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதை அவ்வப்போது அவதானித்து வருகின்றோம்.

சிலர் இதனை கையில் எடுத்து விளையாடுவதையும், அதன் மீது படுத்து உறங்குவதையும் காணொளியாக அவதானித்து வரும் நிலையில், தற்போது பெண் ஒருவர் செய்த செயல் வைரலாகி வருகின்றது.

ஆம் படமெடுத்து நிற்கும் ராட்சத ராஜநாகத்தின் தலையில் மாறி மாறி முத்தம் கொடுத்து சிலிர்க்க வைத்துள்ளார். இக்காட்சி இணையத்தில் பெரும் வைரலாகி வருகின்றது.

குறித்த காட்சியானது Aulia Khairunisa என்பவரின் இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்ட நிலையில், இக்காட்சியினை ஏராளமான நபர்கள் அவதானித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

குறித்த பெண் வன விலங்குகள் மீது அதிக ஆர்வம் கொண்டுள்ள நிலையில் பல காணொளிகளை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

இவரது யூடியூப் சேனலுக்கு மட்டும் 80 ஆயிரத்திற்கும் மேல் பார்வையாளர்கள் பின்தொடர்கின்றனர்.

manithan


 



Post a Comment

Previous Post Next Post