காரில் மண்டை ஓடுகள்... திகிலான காரில் திருவண்ணாமலைக்கு வந்த அகோரியால் பொதுமக்கள் அதிர்ச்சி

காரில் மண்டை ஓடுகள்... திகிலான காரில் திருவண்ணாமலைக்கு வந்த அகோரியால் பொதுமக்கள் அதிர்ச்சி


திருவண்ணாமலை தேரடி வீதியில் பல்வேறு மண்டை ஓடுகளுடன் நின்றிருந்த அகோரியின், காரால் பக்தர்கள் பதறியடித்து ஓடினர்.

திருவண்ணாமலை கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வந்து செல்வர். சம்பவத்தன்று வழக்கம்போல கோயிலின் கிரிவலப்பாதையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. தேரடி வீதியில் சிவனை நினைத்து ஆன்மீக உணர்வோடு கிரிவலம் சென்ற பக்தர்கள், திடீரென்று பீதியில் உறைந்து அங்கேயே நின்றனர்.

தேரடி வீதியில் முருகன் தேர் அருகே, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பல்வேறு மண்டை ஓடுகளுடன் கூடிய கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. நம்பர் பிளேட்க்கு பதிலாக ‘அகோரி நாகசாது’ என்று எழுதப்பட்டிருந்தது. இதனை கண்டு அச்சமடைந்த பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

உடனே அங்கு சென்ற அதிகாரிகள் மண்டை ஓடுகளுடன், ஆங்காங்கே டேஞ்சர் என்று ஸ்டிக்கர் ஒட்டியிருந்த காரை கண்டு மெர்சலாகினர். ஒரு கட்டத்தில் மனதை தேற்றி கொண்டு காரில் இருந்த செல்போன் எண்ணைத் தொடர்பு கொண்டனர்.

1 மணி நேரம் கழித்து நெற்றி நிறைய விபூதி, கழுத்து நிறைய ருத்ராட்ச கொட்டையுடன் அகோரி போன்ற தோற்றமளித்த ஒருவர், காரின் உரிமையாளர் எனக் கூறிக்கொண்டு அங்கு வந்தார். பார்த்தும் ஒரு அகோரியைப் போன்று இருந்தது அனைவரையும் பேச்சு மூச்சில்லாமல் நிற்க வைத்தது.

இதைத் தொடர்ந்து விசாரணைக்காக அவரை காவல் நிலையத்திற்குள் அழைத்த போது, என் பெயர் கடவுள். நானே சிவன், நானே பிரம்மா, நானே விஷ்ணு எனக் கூறிக்கொண்டு உடலில் உள்ள ஆடைகளை அவிழ்த்து கொண்டே காவல் நிலையத்திற்குள் நுழைய முயன்றார்.

இதனால் மிரண்டு போன போலீசார், நான் கடவுள் ஆர்யாவை அஞ்சத்தோடு விசாரிப்பது போல! அகோரியை அவரது காருக்குள்ளேயே வைத்து விசாரித்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தியதில் அவர் ரிஷிகேஷ் பகுதியிலிருந்து திருவண்ணாமலைக்கு சாமி தரிசனம் செய்ய வந்ததாக கூறினார்.

கார் பார்க்கிங் செய்ய இடம் ஏதும் இல்லாததால்! சாலையிலேயே நிறுத்திவிட்டு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ததாகவும் கூறியுள்ளார். தொடர்ந்து போக்குவரத்து விதிமுறையை மீறியதாகவும், பொதுமக்களை அச்சுறுத்தியதாகவும் அகோரி மீது வழக்கு பதிவு செய்யாமல் 3000 ரூபாய் அபராதம் விதித்து அவரை அனுப்பி வைத்தனர்.

news18


 



Post a Comment

Previous Post Next Post