திரிபுரா மாநிலத்திலிருந்து மேற்குவங்கத்தின் சியல்டா நோக்கி கன்ஜன்ஜங்கா விரைவு ரயில் புறப்பட்டது. எதிர்பாராமல், டார்ஜிலிங் மாவட்டத்தின் ருயிதாஸாவில், பயணிகள் ரயிலுக்கு பின்னால் ஒரு சரக்கு ரயில் மோதியது. இதில் பயணிகள் ரயிலின் பெட்டிகள் தண்டவாளத்தில் கவிழ்ந்து தடம்புரண்டன.
தகவல் அறிந்து கொண்டு, பேரிடர் மீட்பு படையினர் ரயிலில் சிக்கிக் கொண்ட பயணிகளை மீட்க விரைந்தனர். இந்த முயற்சியில், எட்டு பேர் உடல் நசுங்கி நிகழ்விடத்திலேயே மரணித்தனர். மேலும், இருபத்தைந்து பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். அதில், ஒரு பயணி நூலிழையில் உயிர் தப்பியவர், ரயில் விபத்தின் கோர நிகழ்வை பகிர்ந்துக் கொள்கிறார்.
கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் விபத்து குறித்து உதவி கோரும் பொதுமக்கள் தொடர்பு கொள்ள இலவச எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மீட்பு பணிகள் அவசர நிலையில் நடைபெறுவதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளனர்.
விபத்து நிகழ்ந்த இடத்திற்கு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேரில் செல்ல உள்ளார். சிக்னலில் நிற்காமல் சரக்கு ரயில் வந்ததே விபத்துக்கு காரணம் என முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. விபத்தில் சரக்கு ரயிலின் ஓட்டுநரும், பயணிகள் விரைவு ரயிலில் இருந்த காவலரும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
இந்தியா