இந்த பூமி வெறும் மனிதர்களுக்கு மட்டும் இல்லை, அனைத்து ஜீவராசிகளுக்குமானது என்ற கருத்து நிறையவே இருக்கிறது. எனவே, பலரும் தாங்கள் விரும்பிய விலங்குகளை வளர்க்கின்றனர். அப்படி வளர்க்க முடியாத பலர் இன்றைய சமூக ஊடக வளர்ச்சியில் உலா வரும் விலங்குகளின் சேட்டைகளை பார்த்து மகிழ்ச்சி அடைகிறார்கள். அப்படி பலரையும் சமூக வலைதளங்களில் மகிழ்வித்து வரும் ஒரு பூனையின் பெயர் நளா.
இந்த பூனைக் குட்டி இன்ஸ்டாகிராமில் ஒரு ரீல்ஸ் மூலம் இந்திய மதிப்பில் சுமார் ரூ.12 லட்சத்தை சம்பாதிக்கிறது. இவ்வாறு இந்த பூனைக்குட்டி இதுவரை ரூ.895 கோடியை சம்பாதித்து, உலகின் பணக்கார பூனையாக வலம் வருகிறது என்றால் பலருக்கும் நம்ப முடியாது. நீங்க நம்பலனாலும் அதா நெசம்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு செல்லப்பிராணி விற்பனை மையத்தில் இருந்து அதை வாரிசிரி மாதச்சிட்டிபன் என்பவர் வாங்கியதில் இருந்து தொடங்குகிறது, அதன் இன்ஸ்டா பயணம். 2012ஆம் ஆண்டில் நளாவின் ஒரு செயலை இன்ஸ்டாவில் அவர் பகிர்ந்தார். அது பலரையும் ஈர்த்தது. இதனால், வியப்படைந்த அவர், பூனைக்குட்டி நளாவின் ஒவ்வொரு செயலையும் படம்பிடித்து, இன்ஸ்டாவில் பகிரத் தொடங்கினார்.
news18
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
உலகம்