வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில், நாமல் ராஜபக்ச எனும் பெயரில் இரண்டு வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளரான நாமல் ராஜபக்ச தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிப்பு விடுத்திருந்தார்.
இதேவேளையில், மற்றொரு நாமல் ராஜபக்சவும் தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். சமபிம கட்சியின் சார்பாக ஹேமந்த விக்ரமசிங்க அவருக்காக கட்டுப்பணம் செலுத்தினார்.
தேர்தலில் போட்டியிட இதுவரை 36 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். ஆனால், ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாமல் ராஜபக்ச இன்னும் கட்டுப்பணம் செலுத்தவில்லை.
கட்டுப்பணம் செலுத்தும் காலக்கெடு நாளை நண்பகல் வரை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
இலங்கை