விமானச்சீட்டு இல்லாமல் விமானத்துக்குள் சென்ற பயணி!

விமானச்சீட்டு இல்லாமல் விமானத்துக்குள் சென்ற பயணி!

மலேசியாவின் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் ஒரு பெண் விமானச்சீட்டின்றி விமானத்துக்குள் நுழைந்ததாக நம்பப்படுகிறது.

Sin Chew Daily செய்தி நிறுவனம் அத்தகவலை வழங்கியது.

கடந்த மாதம் 29ஆம் தேதி சீனாவுக்குப் புறப்படவிருந்த விமானத்தில் சம்பவம் நடந்ததாகத் தெரிகிறது.

விமானத்தில் ஒரு பெண் ஏறினார். அவருடைய இருக்கை எது என்று சிப்பந்தி கேட்டார். பதில் சொல்லாத அவர் அங்கேயும் இங்கேயும் நடந்துகொண்டிருந்தார்.

விமானச்சீட்டைக் காட்டும்படி விமானச் சிப்பந்தி பெண்ணிடம் கேட்டார்.  'விமானச்சீட்டு இல்லை' என்று பெண் கூறியதாக பயணி ஒருவர் Sin Chew Dailyஇடம் சொன்னார்.

பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து இறங்கும்படிக் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

பெண் பின்னர் விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

தற்போது விசாரணை மேற்கொள்ளப்படுவதாக விமான நிலைய நிர்வாகம் சொன்னது.

இதனால் விமானப் பயணம் 3 மணிநேரம் தாமதமானது.

seithi



 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post