மருதப்"பா"வரங்கம்-1

மருதப்"பா"வரங்கம்-1


"வேட்டை" மின்னிதழைப் 
பாராட்டும் 
வாழ்த்துப்"பா"         
"கொண்டதே வேட்டையின் கூற்று"
 (நேரிசை வெண்பா)
நன்மை உலகில் நடந்திட வேண்டியே
முன்நிற்கும் ஆற்றல் முறைகளிலே--
என்றுமே
தொண்டு நிறைத்திடும் தூய பணிகளைக்
கொண்டதே "வேட்டையின்"கூற்று:

1."வையாபுரியை வணங்கு"

(நேரிசை வெண்பா)
நெய்கின்ற நூலில் நிறைத்தார் தமிழுணர்வை
பொய்யில் கருத்தைப் புனைத்தளித்தார்--

உய்யும்

வெய்யோன் எனத்தான் 
வினைகள் புரிந்திட்ட 
"வையா புரியை" வணங்கு:

2."அமிழ்தாய்த் தருவதே ஆர்ப்பு"

(நேரிசை வெண்பா)

சந்தம் இனிக்கவே சங்கீதக் காதையென
சொந்தக் கருத்தில் சுனைநீராய்--

முந்தும்

"தமிழில்"கவிதந்து காண்போர் வியக்க
அமிழ்தாய்த் தருவதே ஆர்ப்பு:

(தொடரும்)


 



Post a Comment

Previous Post Next Post